வாழ்க்கைக் காலம்

22/11/2022 Sujatha Kameswaran 0

வாழ்க்கையில் அனைவரும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் ஒரே மாதிரியாக பெற்றுள்ளோம். அதுவே காலம். அனைவருக்கும் 24 மணி நேரம் என்பது பொதுவானதாக உள்ளது. இந்த காலத்திற்குள் நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதனைப் பொறுத்தே நம் வாழ்வு அமைகிறது. இந்த கால அளவிற்குள் நமது சக்தியை & புத்தியை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைக் கொண்டே நம் வாழ்வின் நிலை அமையும். நம் அனைவரிடமும் இருக்கும் சில பல ஏற்றத்தாழ்வுகள் இவற்றைக்கொண்டே […]

சிவன் – யோகி

01/06/2022 Sujatha Kameswaran 0

அண்டசராசரங்களில் முதல் யோகி, முதல் புலனடக்க வல்லமையுள்ளவர் சிவன். கழுத்தில் பாம்பு ஊர்ந்து கொண்டிருந்தாலும், தலையில் கங்கை ப்ரவாகம் செய்துகொண்டிருந்தாலும், நதிக்கரையோ, பனிமலையோ, மயானமோ எவ்விடமாக இருந்தாலும் மன்மதனே வந்து அம்பெய்தினாலும் எதற்கும் அசையாத, தளர்ந்துபோகாத, எதற்கும் தன் யோகநிலை மாறாதவர் சிவன். சஞ்சலத்திற்கோ, சலசலப்பிற்கோ புலன்களை சிதறடிக்காமல், ஏகாக்ர சித்தத்தில் தவம் புரியும் ஆதியோகி சிவன். ஓம் நம சிவாய||

உழைப்பாளர் தின செய்தி

01/05/2022 Sujatha Kameswaran 0

यदि ह्यहं न वर्तेयंजातु कर्मण्यतन्द्रित:।मम वर्त्मानुवर्तन्ते मनुष्या: पार्लर सर्वश:।।३:२३उत्सीदेयुरिमे रोका न कुर्यां कर्म चेदहम्।सङ्करस्य च करता स्यामुपहन्यामिमा: प्रजा:।।३:२४ “நான் எப்பொழுதும் அயர்வின்றிச் செயல்களைச் செய்யாமல் போனால், நிச்சயமாக மனிதர்களும் என்னுடைய வழியையே எல்லாவிதத்திலும் பின்பற்றுவர்”“நான் செயல்களைச் செய்யாமல் விட்டால் இவ்வுலகங்கள் அழிந்துபோகும். மேலும், கலக்கத்திற்கும், குழப்பத்திற்கும் ஜனங்களின் அழிவிற்கும் நானே காரணம் ஆகிவிடுவேன்.” “எனவே நான் எனது கடமை தவறாது செயல்புரியவேண்டும்”என கண்ணன் […]

ஐந்து வகை நமஸ்காரங்கள்

22/12/2021 Sujatha Kameswaran 0

நமஸ்காரம் செய்வது / வணங்குவது எனும் முறையில் ஐந்து விதங்கள் உள்ளன. 1. தலையை மட்டும் குனிந்து வணங்குதல் ‘ஏகாங்க நமஸ்காரம்’ எனப்படும். அதாவது ஒரு அங்கத்தினால் வணங்குவது. 2. தலைக்குமேல் இருகைகளையும் கூப்பி வணங்குவது, ‘திரியங்க நமஸ்காரம்’ என்பர். மூன்று அங்கங்களால் நமஸ்காரம் செய்வது. 3. இருகைகள், இருமுழங்கால்கள், தலை ஆகிய ஐந்தும் நிலத்தில்பட வணங்குவது ‘பஞ்ச அங்க நமஸ்காரம்’ எனப்படும். அதாவது ஐந்து அங்கங்களால் நமஸ்கரிப்பது. 4. […]

ஆலயங்களில் நாகஸ்வரம் வாசிக்கவேண்டியமுறை

26/07/2021 Sujatha Kameswaran 0

ஆலயங்களில் பூஜை நேரங்களில் நாகஸ்வரம் இசைக்கவேண்டிய ராகங்கள்: 1. காலபூஜை முடிவில் கற்பூர தீபாராதனையின்போது, தேவாரம், திருப்புகழ் முதலியவற்றை இசைக்கவேண்டும். 2. இரவுபூஜையின்போது, (அர்த்தஜாம பூஜையில்) ஆனந்தபைரவி, நீலாம்பரி, கேதாரகௌளை, புன்னாகவராளி ஆகிய ராகங்களை இசைக்கவேண்டும். 3. பூஜை முடிந்து பள்ளியறை சாத்தியதும், பள்ளியறைக்கதவுப்பாட்டை இசைக்கவேண்டும். (கூடவே வாய்ப்பாட்டும் பாடலாம்)

எண்களின் சிறப்பு – எண்-5

02/06/2021 Sujatha Kameswaran 0

எண் – 5 தாய்கள் ஐவர் – பெற்றதாய், அண்ணனின் மனைவி, குருவின் மனைவி, மனைவியைப் பெற்ற தாய் & மன்னனின் மனைவி தந்தையர் ஐவர் – பெற்ற தந்தை, அண்ணன், உபநயனம் செய்வித்தவர், குரு-ஆசிரியர் & ஆபத்திலிருந்து காத்தவர். ஞானேந்திரியங்கள் ஐந்து – ஒளி, சுவை, ஊறு, ஓசை & மணம் பர்வங்கள் ஐந்து – கிருஷ்ணபட்ச அஷ்டமி, கிருஷ்ணபட்ச சதுர்தசி, அமாவாசை, பௌர்ணமி & சங்கராந்தி கங்கைகள் […]

எண்களின் சிறப்பு – எண்-4

31/05/2021 Sujatha Kameswaran 0

எண் – 4 வேதங்கள் நான்கு – ரிக், யஜுர், சாம & அதர்வணம் திசைகள் நான்கு – கிழக்கு, மேற்கு, வடக்கு & தெற்கு சேனைகள் நான்கு – ரதங்கள், கஜங்கள், குதிரைகள் & காலாட்படைகள் உபாயங்கள் நான்கு – சாம, தான, பேத & தண்டனை பருவங்கள் நான்கு – வசந்தகாலம், கோடைக்காலம், கார்காலம் & குளிர்காலம் மனிதபருவங்கள் நான்கு – பால்யம், யௌவனம், கௌமாரம், வயோதிகம். […]

எண்களின் சிறப்பு – எண் – 3

28/05/2021 Sujatha Kameswaran 0

எண் – 3 எண்கள் பலவகைகளில் நமக்குத் துணைபுரிகின்றன. அத்தகைய எண்களைப்பற்றியும் அவற்றின் சிறப்பைப்பற்றியும் அறிவது அவசியம். முதண்மை தெய்வங்கள் மூன்று தெய்வங்கள் பல இருப்பினும் முதண்மையாக மும்மூர்த்திகளையே (பிரம்மா, விஷ்ணு, சிவன்) குறிப்பிடுகிறோம். உயிரினங்கள் அனைத்திற்கும் குணங்கள் மூன்று. (சத்வம், ரஜஸ், தமஸ்) கரணங்கள் மூன்று மனசு, வாக்கு, காயம் காலங்கள் மூன்று இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்.

ஒரு வரியில் சில தெய்வங்கள்

21/05/2021 Sujatha Kameswaran 0

  ஒரு வரியில் சில தெய்வங்கள்:- ” சிரமாறு உடையான் “ 1. சிரம் மாறு உடையான் – தலையது மாறிவேழத்தின் சிரம் அமைந்த விநாயகனைக்குறிக்கும் 2 . சிரம் ஆறு(6)உடையான் – ஆறு முகம்படைத்த சுப்பிரமணியத்தைக்குறிக்கும் 3 . சிரம் ஆறு உடையான் – சிரத்தில் கங்கையை கொண்ட சிவனைக்குறிக்கும் 4 . சிரம் மாறு உடையான் – சிரமது முன்னும் பின்னும் உள்ள நான் முகனாம் பிரம்மாவைக்குறிக்கும் […]

உழவாரப்பணி

19/05/2021 Sujatha Kameswaran 0

உழவாரப்பணி: கோயிலை சுத்தப்படுத்துவது உழவாரப்பணியாகும். இதைச் செய்ய தோசைக்கரண்டி வடிவில் ஒரு கருவியைப்பயன்படுத்துவர் இதற்கு, ‘உழவாரப் படை’ என்று பெயர். திருக்கோவில்களில் சூழ்ந்திருக்கும் ஒட்டடைகள் மற்றும் அழுக்குகளை நீக்குவது. எண்ணெய் பிசுக்கினால் அழுக்குப் படிந்த விளக்குகளை சுத்தம் செய்தல். வாரம் ஒருமுறை திருக்கோயிலை பசுஞ்சாணம் இட்டு மொழுகுதல். கோவிலுக்கு வருவோர் போடும் குப்பைகளை குப்பைக் கூடைகளைப் போடுவது. அவ்வாறு ஆங்காங்கேக் குப்பைப்போடுபவரை குப்பைத்தொட்டியில் போடச்செய்வது.கோபுரங்களில், மதில்சுவர்களில் முளைத்திருக்கும் செடிகளை அகற்றுதல். […]

1 2 3 4 5 31