எண்ணங்கள் வண்ணங்கள்

30/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் இலட்சியத்தை தீர்மானித்தல்: இலட்சியம் எதுவென்று நிச்சயமானால், அதனை அடையும் வழிமுறைகளும் எளிதாகும்.  இலட்சியத்தை நிர்ணயிக்க சிலவற்றை நெறிபடுத்திக்கொள்ளவேண்டும். அவை, 1. சுய விருப்பம், மற்றும் திறமையை அறிதல். 2. மற்றவர் வழிகாட்டுதல் இருக்கலாம், ஆனால் மற்றவர்களையே பின்பற்றக்கூடாது. அதாவது, மற்றவர்களுக்காக நாம் வாழலாம், ஆனால் மற்றவர் வாழ்க்கையை நாம் வாழமுடியாது. 3. இலட்சியத்தை அடைய, செய்யவேண்டிய செயல்களையும், அதற்கான செலவுகளையும் திட்டமிடவேண்டும். 4. நம் இலட்சியத்தின் எதிர்கால […]

திருக்குறள்

30/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்(1-3-8) பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும். Niraimozhi maandhar perumai nilaththu maraimozhi kaatti vidum The hidden words of the men whose words are full of effect, will shew their greatness to the world

கொன்றை வேந்தன்

30/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு. மற்றவர் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமையால் பேசுவது, நாம் பெற்றுள்ள நல்லனவற்றை அழித்து விடும். 13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு. சிக்கனமாக வாழ்க்கை நடத்தி, செல்வத்தை சேர்க்கவேண்டும்.

திருக்குறள்

29/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 27. சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே உலகு (1-3-7) சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம். Suvaioli ooruosai naatramen draindhin vakaidherivaan katte ulaku The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, […]

எண்ணங்கள் வண்ணங்கள்

29/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் ஆழ்மன ஆற்றல்: இறைவன் படைத்த அற்புதபடைப்புக்களில் ஒன்றான மனிதரின் ஆற்றலில், ஆழ்மன ஆற்றல் என்பது மிகவும் சக்திவாய்ந்ததாகும். ஆழ்மனத்தில் பதிந்த எந்தவொரு பதிவும், காலத்திற்கும் அழிவதில்லை. பத்துவயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு, அவ்வயதிற்குள், அவர்தம் மனதில் பதியும் எண்ணங்கள் அனைத்தும், அவர்களை ஏதேனும் ஒர் விதத்தில் தொடர்ந்துவரும். அவ்வயதிற்குள் அமையும் சூழலும், ஏற்படும் பழக்கமும், கற்றுக்கொள்பவைகளும், தெரிந்துக்கொள்பவைகளுமே என்றென்றிற்கும் இருக்கும், அவர்களது அடிப்படைத் தன்மைகளாய் அமையும். வெளியில் பெரும் […]

கொன்றை வேந்தன்

29/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 10. ஒருவனைப் பற்றி ஓரகத் திரு. பெண்ணானவள், நல்ல ஆண் ஒருவனைத் தேர்ந்தெடுத்து, அவனுடன் ஓரே வீட்டில் இன்பமாய் வாழவேண்டும். 11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம். வேதங்களை நன்கு ஓதுவதே, அந்தணர்களுக்கு மிகச்சிறந்த ஒழுக்கமாகும்.

திருக்குறள்

28/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 26. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் (1-3-6) Seyarkariya Seyvaar Periyar Siriyar Seyarkariya Seykalaa Thaar செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர். The great will do those things which is difficult to be done; but the mean cannot do them

எண்ணங்கள் வண்ணங்கள்

28/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் இச்சையும் அனிச்சையும்: பெரும்பாலன செயல்கள் இச்சையின் காரணமாகவே நிகழ்கின்றன. உதாரணமாக சாப்பிடுவது, விதவிதமாய் உடுத்துவது, வெளியில் எங்காவது செல்வது, படிப்பது, எழுதுவது, ஏதேனும் செயல்புரிவது, உறங்குவது, போன்ற பல செயல்கள் நமது விருப்பத்தால் நடைபெறுவதாகும். எனினும், செயல்புரிந்து ஏற்பட்ட பழக்கம் காரணமாக, இவற்றில் பல வெகுவிரைவில் அனிச்சை செயல்களாகின்றன. அதாவது நம் புத்தியின் கட்டளை இல்லாமலேயே நடைபெறுகின்றன. முதலில் நாமாக சாப்பிடும் போது, என்ன உணவு உள்ளதோ […]

கொன்றை வேந்தன்

28/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 8. ஏவா மக்கள் மூவா மருந்து. பெற்றோர் குறிப்பறிந்து செயல்படும் மக்கள் பிணிதீர்க்கும் மருந்தைப் போன்றவர்கள். 9. ஐயம் புகினும் செய்வன செய். பிச்சை எடுத்து வாழவேண்டிய நிலை ஏற்படினும், நற்செயல்களைச் செய்யவேண்டும்.

எண்ணங்கள் வண்ணங்கள்

27/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் திடமுடிவும், விடாமுயற்சியும்: எதை செய்யவேண்டும், எதற்காக செய்யவேண்டும், எவ்வாறு செய்யவேண்டும் என்ற தெளிவுடன் செயல்களை ஆரம்பிக்கவேண்டும். நமது செயல்கள் பற்றிய எண்ணங்களும் அதற்கான தீர்கமான முடிவும், நமதாக இருக்கும் பட்சத்தில், எவ்வித இடையூறுகள் ஏற்பட்டாலும், அவற்றை சரிசெய்ய நம்மால் இயலும். எண்ணியமுடிதல் வேண்டும், நல்லன எண்ணவேண்டும், என்பதுடன், திண்ணிய நெஞ்சமும் வேண்டும். தீர்கமான முடிவுடன், செயலைத்தொடங்கி, விடாமுயற்சியுடன் செயல்பட்டால் செயல்கள் தாமதமாகமல் விரைவில் நிறைவுறும். எண்ணங்கள் தொடரும்…

1 2 3 9