காலச்சக்கரம்

13/04/2024 Sujatha Kameswaran 0

காலச்சக்கரம் காலமாற்றத்தைக் குறிக்கும் சொல் காலச்சக்கரம். இது காலம்-நேரம் மாறுவதைக் குறிப்பிடுவதோடு, அச்சுழற்சியியுடன் மானிடர்களும் எங்ஙனம் மாறுகின்றனர் என்பதை குறிக்கின்றது. இருபது வயதில் இதுதான் வேண்டும் என்று தோன்றும் முப்பது வயதில் இவைகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும் நாற்பது வயதில் இதுவே போதும் என்று தோன்றும் ஐம்பது வயதில் இவைகள் இல்லையென்றாலும் பரவாயில்லை எனத் தோன்றும் அறுபது வயதில் எது இல்லையென்றாலும் பரவாயில்லை என்று தோன்றும் எழுபது […]

ஒரு வரியில் சில தெய்வங்கள்

21/05/2021 Sujatha Kameswaran 0

  ஒரு வரியில் சில தெய்வங்கள்:- ” சிரமாறு உடையான் “ 1. சிரம் மாறு உடையான் – தலையது மாறிவேழத்தின் சிரம் அமைந்த விநாயகனைக்குறிக்கும் 2 . சிரம் ஆறு(6)உடையான் – ஆறு முகம்படைத்த சுப்பிரமணியத்தைக்குறிக்கும் 3 . சிரம் ஆறு உடையான் – சிரத்தில் கங்கையை கொண்ட சிவனைக்குறிக்கும் 4 . சிரம் மாறு உடையான் – சிரமது முன்னும் பின்னும் உள்ள நான் முகனாம் பிரம்மாவைக்குறிக்கும் […]

கற்றல் கற்பித்தலில் நவீன தொழில் நுட்பங்களின் பங்கு

12/09/2019 Sujatha Kameswaran 0

நம் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நாளும் ஏன் ஒவ்வொரு நிமிடமும் ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்கிறோம், கற்பிக்கிறோம். கற்றல் என்பது நம்மைச் சுற்றி ஏதேனும் ஒரு காரணி மூலம் நிகழும் நிகழ்வுகளை மனதில்-நம் சிந்தையில் ஏற்றுக்கொள்ளல் ஆகும். பார்த்தல், கேட்டல், படித்தல் மற்றும் எழுதுதல் என்பதன் வாயிலாக விஷயங்களை எண்ணத்தில் சீர்தூக்கிப்பார்த்து நிறுத்திக்கொள்வதே சிறந்த கற்றலாகும். காதில் ஏற்பதெல்லாம் கற்றல் ஆகாது. கற்பதற்கு பார்வை, செவித்திறன், பேச்சுத்திறன் மற்றும் எழுதும் திறன் […]

தனித்துவம்

13/07/2019 Sujatha Kameswaran 0

உலகில் உள்ள அனைவருக்கும் தனித்தன்மை உண்டு. அதுவே அவர்களின் தனித்துவம்.  இரட்டையர்களானாலும் அவர்கள் இருவருக்கும் தனித்தனியே சில திறமைகள், செயல்பாடுகள் இருக்கும். தனித்துவமும் ஒரு தத்துவமே. நமது தனித்துவத்தை – தனித்திறமையை நாமே உணரமுடியும். நமது தனித்திறமையை எவ்வாறு அறிவது? மிகவும் எளிய வழியில் நம்மாலேயே உணரமுடியும். அதாவது, நமக்கு இயல்பாகவும், எளிதாகவும் எவ்வெவற்றையெல்லாம்  செய்ய முடிகிறதோ அவ்வவற்றின் மூலமாக நமது தனித்திறனை நமது செயல்திறன்கள் மூலம் அறியலாம். ஒவ்வொரு வெற்றியாளரும் […]

எண்ணங்கள் வண்ணங்கள்

03/05/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் திட்டப்பட்டியல்: இலக்கை அடைய,  நிச்சயமான விருப்பத்தை நிர்ணயித்துக்கொள்ளவேண்டும். நம்மேல் முழு நம்பிக்கை வைக்கவேண்டும்.  நம் குறிக்கோளினால் ஏற்படும் நன்மைகளையும் தீமைகளையும் பட்டியலிட்டுக்கொள்ளவேண்டும். தடைகளை அறிந்துக்கொண்டு அவற்றை நீக்க அல்லது கடந்து வர வழிமுறைகளை வகுக்கவேண்டும்.  இலக்கை சார்ந்த தற்போதைய நிலவரத்தையும், எதிர்கால வளர்ச்சிக்குத் தேவைப்படும் வளர்ச்சி குறித்தும் கணித்தல் மிக அவசியம். தேவையான மற்ற காரணிகளை, உதவிகளை மற்றும் ஒத்துழைப்பை பட்டியலிடல். இலக்கை நோக்கிய செயல்முறை திட்டமிடல் சாலச்சிறந்தது. குறிக்கோளை அடைய காலவரையறை நிர்ணயத்துக்கொள்ளவேண்டும். மனக்கண்ணோட்டத்தில் […]

எண்ணங்கள் வண்ணங்கள்

02/05/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் குறிப்பெடுத்தலும் திட்டமிடலும்: எந்தவொரு சிறப்பான செயலும், சிறப்பாய் நடந்தேற, அதற்குத் தேவையானவற்றைக் குறிப்பெடுத்துக்கொள்ளுதல் சிறந்த வழிமுறையாகும். பொதுவாக எங்காவது பயணம் மேற்கொள்வதானால், அப்பயணத்திற்குத் தேவையானவை எவை எவை என குறிப்பெடுத்துக்கொண்டு,(check list) அப்பொருட்களை சேகரித்துக்கொண்டு, முடிவில் ஒருமுறை அக்குறிப்பை வைத்துக்கொண்டு, சரிபார்த்துக்கொள்வதன் மூலம், பயணம் இனிதாய் அமையும். பயணத்திற்கே திட்டமிடல், குறிப்பெடுத்தல் அவசியம் எனில், இலட்சியத்தை அடைய, நிச்சயம், நன்றாக, தீவிரமாக குறிப்பெடுத்தல் மிகத்தேவையானது. எண்ணங்கள் தொடரும்… […]

எண்ணங்கள் வண்ணங்கள்

01/05/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் செயல்படுத்தலின் செயல்முறைகள்: முதலில் இலட்சியத்தை சரிவர வரையறுத்துக் கொள்ளவேண்டும். பின்பு, அதனை அடைய என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்பதனைத் தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும். இவற்றிற்கான சாத்தியக்கூறுகளை, கணித்துக்கொள்வதுடன், செய்யவேண்டிய செலவுகள் மற்றும், அதற்குத்தேவையான மற்ற காரணிகளையும் முன்னமே திட்டமிட்டுக்கொள்வது நல்லது. “துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும்”. (குறள்- 651) ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும், செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும், என […]

எண்ணங்கள் வண்ணங்கள்

30/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் இலட்சியத்தை தீர்மானித்தல்: இலட்சியம் எதுவென்று நிச்சயமானால், அதனை அடையும் வழிமுறைகளும் எளிதாகும்.  இலட்சியத்தை நிர்ணயிக்க சிலவற்றை நெறிபடுத்திக்கொள்ளவேண்டும். அவை, 1. சுய விருப்பம், மற்றும் திறமையை அறிதல். 2. மற்றவர் வழிகாட்டுதல் இருக்கலாம், ஆனால் மற்றவர்களையே பின்பற்றக்கூடாது. அதாவது, மற்றவர்களுக்காக நாம் வாழலாம், ஆனால் மற்றவர் வாழ்க்கையை நாம் வாழமுடியாது. 3. இலட்சியத்தை அடைய, செய்யவேண்டிய செயல்களையும், அதற்கான செலவுகளையும் திட்டமிடவேண்டும். 4. நம் இலட்சியத்தின் எதிர்கால […]

எண்ணங்கள் வண்ணங்கள்

29/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் ஆழ்மன ஆற்றல்: இறைவன் படைத்த அற்புதபடைப்புக்களில் ஒன்றான மனிதரின் ஆற்றலில், ஆழ்மன ஆற்றல் என்பது மிகவும் சக்திவாய்ந்ததாகும். ஆழ்மனத்தில் பதிந்த எந்தவொரு பதிவும், காலத்திற்கும் அழிவதில்லை. பத்துவயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு, அவ்வயதிற்குள், அவர்தம் மனதில் பதியும் எண்ணங்கள் அனைத்தும், அவர்களை ஏதேனும் ஒர் விதத்தில் தொடர்ந்துவரும். அவ்வயதிற்குள் அமையும் சூழலும், ஏற்படும் பழக்கமும், கற்றுக்கொள்பவைகளும், தெரிந்துக்கொள்பவைகளுமே என்றென்றிற்கும் இருக்கும், அவர்களது அடிப்படைத் தன்மைகளாய் அமையும். வெளியில் பெரும் […]

எண்ணங்கள் வண்ணங்கள்

28/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் இச்சையும் அனிச்சையும்: பெரும்பாலன செயல்கள் இச்சையின் காரணமாகவே நிகழ்கின்றன. உதாரணமாக சாப்பிடுவது, விதவிதமாய் உடுத்துவது, வெளியில் எங்காவது செல்வது, படிப்பது, எழுதுவது, ஏதேனும் செயல்புரிவது, உறங்குவது, போன்ற பல செயல்கள் நமது விருப்பத்தால் நடைபெறுவதாகும். எனினும், செயல்புரிந்து ஏற்பட்ட பழக்கம் காரணமாக, இவற்றில் பல வெகுவிரைவில் அனிச்சை செயல்களாகின்றன. அதாவது நம் புத்தியின் கட்டளை இல்லாமலேயே நடைபெறுகின்றன. முதலில் நாமாக சாப்பிடும் போது, என்ன உணவு உள்ளதோ […]

1 2 3 4