கொன்றை வேந்தன்

05/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 22. கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி. நம் கையிலிருக்கும் செல்வத்தைவிட, உண்மையான செல்வம், நாம் கற்றக்கல்வியே ஆகும். 23. கொற்றவன் அறிதல் உற்றிடத்துதவி. துன்பத்தால் யார் வருந்துகின்றனர் என அறிந்து உதவி செய்தலே, அதிகாரத்தில் இருப்பவரின் முதல் கடமையாகும்.

கொன்றை வேந்தன்

04/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 20. கெடுவது செய்யின் விடுவது கருமம். ஒரு செயலானது தீயவிளைவைத்தருவதாக இருந்தால், அச்செயலைச் செய்யாமல் விடுவது நல்லது. 21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை. வறுமை நிலை ஏற்பட்டாலும், நமது மன உறுதியே, நம்மிடம் செல்வத்தைக் கொண்டுசேர்க்கும்.

திருக்குறள்

03/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் பால் : அறத்துப்பால் Section : Virtue அதிகாரம்: அறன் வலியுறுத்தல் – 4 Division : Assertion of the Strength of Virtue – 4 இயல் : பாயிரவியல் Chapter : Prologue – 1 குறள் – 31. சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு (1-4-1) அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை […]

கொன்றை வேந்தன்

30/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு. மற்றவர் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமையால் பேசுவது, நாம் பெற்றுள்ள நல்லனவற்றை அழித்து விடும். 13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு. சிக்கனமாக வாழ்க்கை நடத்தி, செல்வத்தை சேர்க்கவேண்டும்.

கொன்றை வேந்தன்

26/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர். கஞ்சத்தனத்துடனும், பிறருக்குத் தரக்கூடாது என்கிற எண்ணத்துடனும் சேர்த்து வைக்கும் செல்வமானது திருடர்களால் அபகரிக்கப்படும். 5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு. குறைந்த அளவு உணவு உண்பதே பெண்களுக்கு அழகைத்தரும்.

1 2