கொன்றை வேந்தன்

24/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண். பால் சேர்ந்த நல்ல உணவாக இருப்பினும், பசி தோன்றிய பின்னரே உண்ணவேண்டும். அதனை உண்ணும் நேரம் அறிந்தே உண்ணவேண்டும். 61. பிறன்மனை புகாமை அறமெனத் தகும். பிறர்மனைவி மீது ஆசைக்கொள்ளாமலும், பிறர் குடித்தனத்தைக் கெடுக்காமல் இருத்தலும் சிறந்த அறமாகும்.

திருக்குறள்

12/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 40. செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி (1-4-10) ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே ஆகும். செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே. Seyarpaala thorum arane oruvarku uyarpaala thorum pazhi That is virtue which each ought to do, and that is vice which each should shun

திருக்குறள்

10/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 38. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்(1-4-8) ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும். Veezhnaal padaa-amai nandraatrin aqdhoruvan vaazhnaal vazhiyataikkum kal If one allows no day to pass without some good being done, his conduct […]

திருக்குறள்

08/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 36. அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை (1-4-6) இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல், உடனுக்குடன் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும். Andrarivaam ennaadhu aranjeyka matradhu pondrungaal pondraath thunai Defer not virtue to another day; receive her now; and at the dying hour […]

திருக்குறள்

07/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 35. அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம் (1-4-5) பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைத் தவிர்த்து வாழ்வதே அறமாகும். Azhukkaa ravaaveguli innaachchol naangum izhukkaa iyandra dharam. That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech

திருக்குறள்

06/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 34. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற(1-4-4) ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். இது ஒருவகை அறம் ஆகும். மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை. Manaththukkan maasilan aadhal anaitharan aagula neera pira Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all […]

திருக்குறள்

05/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 33. ஒல்லும் வகையான அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல் (1-4-3) செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும். Ollum vakaiyaan aravinai ovaadhe sellumvaai ellaanj cheyal As much as possible, in every way, incessantly practise virtue Transliteration

திருக்குறள்

03/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் பால் : அறத்துப்பால் Section : Virtue அதிகாரம்: அறன் வலியுறுத்தல் – 4 Division : Assertion of the Strength of Virtue – 4 இயல் : பாயிரவியல் Chapter : Prologue – 1 குறள் – 31. சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு (1-4-1) அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை […]

கொன்றை வேந்தன்

01/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 14. கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை. கற்பு என்பது, நடத்தைத் தவறாமையாகும். 15. காவல்தானே பாவையர்க்கு அழகு. நல்லொழுக்கம் தவறாமல், தன்னைக் காத்துக்கொள்வது பெண்களுக்கு சிறப்பானதாகும்.