எண்ணங்கள் வண்ணங்கள்

26/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் சொல்வதும் செய்வதும்: குறிக்கோள் குறித்த எண்ணங்கள் எப்பொழுதும் நம்மைவிட்டு நீங்காமல் இருக்க சில பழக்கங்களை மேற்கொள்ளவேண்டும். முதலில் எடுத்த செயலை என்னால் செய்யமுடியும் என்று உள்ளத்திலும் வெளியிலும் திரும்பத்திரும்ப சொல்லிக்கொள்ளவேண்டும். எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் மிகுந்த சக்தி உண்டு. அதன்படி, நாம் நமக்கு வேண்டியவற்றை மீண்டும் மீண்டும் உரைப்பதனால் அவை நமதாகிவிடும். நமது செயல்களை மேம்படுத்த உதவும். மேலும் அச்செயலகள் குறித்து செய்துபார்த்தல் (கற்பனையாக) செயல்களின் முழுமையை உணரவைக்கும். […]

எண்ணங்கள் வண்ணங்கள்

25/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் செயல்வடிவ கற்பனை: தினமும் நாம் செய்யவேண்டியவைக் குறித்து கற்பனை செய்துகொள்ளவேண்டும். உதாரணமாக, பாடம் நடத்தவிருக்கும் ஆசிரியர், மாணவர்களின் மனநிலைகுறித்தும், பாடங்களை எவ்வாறு அவர்களுக்கு விளங்கவைக்கலாம் என்பது குறித்தும், ஓர் சிறு கற்பனையுடன், ஓர் மனக்காட்சியுடனேயே வகுப்பிற்கு செல்வார்.  இது எத்தொழிலானாலும் பொருந்தும். செயல்குறித்த அதன் போக்கு மற்றும் விளைவுகள் குறித்த எந்தவொரு கற்பனையும் இல்லாமல் எவராலும் இலக்கை எளிதில் அடைய இயலாது. மனதில் காட்சிப்படுத்திப் பார்ப்பது, உளவியல் ரீதியாக […]

எண்ணங்கள் வண்ணங்கள்

24/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் எண்ணமும் செயலும்: வெற்றியை நோக்கிய பயணத்தில் முதலாவதாக நமது மனதை தயார்ப்படுத்துதல் மிகவும் அவசியம். செயலைக் குறித்தும், அதன் முடிவான வெற்றியைக்குறித்தும், திடமான எண்ணத்தை நம் மனதில் நாம் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். ‘எண்ணமே வாழ்வு’, என்பதற்கிணங்க, நமது மனதில் விதைத்த செயலிற்கான எண்ணம், வழிமுறைகள், மற்றும் பல்வேறு நடைமுறைகள் என்பன அவ்விதைக்கு இடப்படும் உரமாகவும், ஊற்றப்படும் நீராகவும் அமைந்து பெரும் பலனளிக்கும். இவ்வாறு எண்ணுவதில், செயலைக்குறித்து எத்தனைமுறை, எத்தனை […]

எண்ணங்கள் வண்ணங்கள்

23/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் செயலும், பழக்கமும்: நாம் செய்யும் செயல்களில் சில, நாளடைவில் நமக்கு பிடித்தமானதாகின்றன. அவைகளில் பெரும்பாலனவை அன்றாடப்பழக்கமாகின்றன. அவ்வாறு, பழகிய, பழக்கப்பட்ட செயல்கள் நல்ல முன்னேற்றத்தை அடைகின்றன. நன்கு பழகிய இடங்களில் நமது நடவடிக்கைகளுக்கும், சற்றே அறிமுகமான இடங்களில் நாம் செய்யும் செயல்களுக்கும் உண்டான வித்யாசம் போல இதுவும் அமையும். ‘கைவந்த கலை’, என்பதற்கிணங்க நம் பழக்கத்தில் வந்த செயல்களை மேலும் பட்டைத்தீட்டி மெருகேற்றமுடியும். அறிமுக செயல்களே தயக்கமாக […]

எண்ணங்கள் வண்ணங்கள்

22/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் தூண்டுகோல்: ‘சுடர்விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்’, என்ற வாக்கியத்தின்படி எத்தனைத் திறைமைசாலியாக இருந்தாலும், அவர்களுக்கென ஏதேனும் ஒரு தூண்டுகோல் மிகவும் அவசியம். அத்தூண்டுகோல், நேர்மறையானதோ, எதிர்மறையானதோ எவ்வாறாயினும், அதன் துணைகொண்டே ஒவ்வொருவரும் சாதிக்கின்றனர். வாழ்வில் அனுபவித்த வேதனை, உற்றாரின் தூண்டுதல், மற்றோரின் தூண்டுதல், நம்பிய சிலரின் எதிர்மறை நடவடிக்கைகள், பேச்சுக்கள் இவற்றில் ஏதேனும் ஒரு அல்லது சில காரணங்களால் வாழ்க்கை மாறுதல் அடைகின்றது. சிறுபொறியாய் கிளம்பும் இவை […]

எண்ணங்கள் வண்ணங்கள்

21/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் மன உற்சாகமும், தளர்ச்சியும்: மனித வாழ்விற்கு ஓர் உந்து சக்தியாய் இருப்பது, மனதின் உற்சாகமாகும். மனம் சமநிலையில் இருந்தால், எவ்விதமானப் பிரச்சனைக்கும் தீர்வு எளிதில் கிடைக்கும். மனதின் உற்சாகம், நம் இயல்பை வெளிக்கொணருவதுடன், நம்மால் இயலுவனவற்றை வெளிப்படுத்துவதுடன், நமது இயலாமை எவை என்பதனையும், தெளிவாக, தாழ்வுமனப்பான்மை ஏற்படாதவாறு நமக்கு உணர்த்துகிறது. உற்சாகம் குன்றிய மனத்துடன் இருக்கையில், மிகச்சாதாரண இயலாமையும், பெரும் இழப்புபோலத் தோன்றும், நமது இயல்பை மறைத்துவிடும். […]

எண்ணங்கள் வண்ணங்கள்

21/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் பயமும் அச்சமும்: வாழ்க்கையில் பயம் இருக்கலாம், ஆனால் பயமே வாழ்வாகக்கூடாது. ஒவ்வொன்றிற்கும் பயப்படவோ, அச்சமடையவோ ஆரம்பித்தால், எதனையும் சரியாகச் செய்யமுடியாது. தொடங்கிய நிலையிலேயே அது முடிவடைந்துவிடும். செயலைத் தொடங்கும்போதோ அல்லது இடையிலோ ஏற்படும் தயக்கம் வேறு, அச்சமயம் தோன்றும் பயம் என்பது வேறு. தயக்கம் என்பது செயலின் போக்குக்கேற்ப தானே நீங்கிவிடும். ஆனால் செயல் குறித்த பயம், செயலிற்கான உற்சாகத்தைக்குறைத்துவிடும். நாம்தான் இவற்றை முயற்சியெடுத்து நீக்கிக்கொள்ளவேண்டும். தவிர்க்கமுடியாமல் […]

எண்ணங்கள் வண்ணங்கள்

20/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனம்: விமர்சனம் என்பது செயலை கருத்தில்கொள்ளாமல், செய்தவரை கருத்தில் கொள்வதாய் இருந்தால், அது சரியான விமர்சனமாய் அமையாது. நமக்கு பிடித்தவராய் இருந்தால் அதற்கேற்பவும், பிடிக்காதவராயினின் அதற்கேற்றாற்போலவும், நமது விமர்சனங்கள் அமையும். எனவேதான் செயல்களை சீர்தூக்கி விமர்சனம் செய்யவேண்டும். ஆக்கப்பூர்வமான விமர்சனத்திற்கு, முதலில் அவரது செயல்கள் குறித்து சரியாக அறிந்துகொண்டு, நோக்கத்தை தெரிந்துகொண்டு, பின்பே அவற்றைக்குறித்து பேசவேண்டும். ஏதேனும் தவறு இருப்பின், ‘இது தவறு’, ‘இவ்வாறு செய்யாதே’, […]

எண்ணங்கள் வண்ணங்கள்

19/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் வெற்றியின் தடங்கல்: செயல்களில் வெற்றிகொள்ள, மேற்கொள்ளப்படும் உக்திகள், பின்பற்றப்படும் நடைமுறைகள் போன்றவைகள் மட்டுமல்லாமல், செயல்கள் குறித்த விமர்சனங்கள் மிகவும் முக்கியமானவை. மோசமான விமர்சனகள், செயல்களை தடைபடுத்தி, வெற்றிக்குப் பெருங்தடங்கலாய் அமையும். எதிர்பாராதவர்களிடமிருந்து கிடைக்கும் சாதாரண விமர்சனமும் ஒருவித உற்சாகத்தை அளிக்கும். அதேசமயம் நாம் எதிர்பார்ப்பவரிடமிருந்து வராத சாதாரண விமர்சனமும் நம்மை சலிப்படைய செய்யலாம். ஒவ்வொரு விமர்சனமும் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும். இக்காரணத்தினாலேயேதான், தற்பொழுது உலகில் பெரும்பாலானோர் Facebook, […]

எண்ணங்கள் வண்ணங்கள்

18/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் தயக்கமும் அச்சமும்: எந்த ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்னரும் நமது ஆழ்மனத்தில் அச்செயலைக்குறித்த ஒரு அச்சம் தோன்றும். இச்செயலை எப்படி செய்வது? என்னென்ன முறைகளைக்கையாளுவது? விளைவுகள் எவ்வாறு இருக்கும்? என்பனபோன்ற எண்ணங்கள் வரும். பெற்றொரோ மற்றொரோ கண்டிக்காத வரை ஒரு குழந்தைக்கு எவ்வித அச்சமும் தயக்கமும் எக்காரியத்தைச் செய்யும்போதும் ஏற்படுவதில்லை. அச்செயல்களில் தோன்றிய விளைவுகளின் அனுபவம் மூலமாகவே அக்குழந்தை அதேசெயலை மீண்டும் செய்யவோ, செய்யாமல் இருக்கவோ தீர்மானிக்கிறது. […]

1 2 3 4