திருவெம்பாவை – பாசுரம் 17

01/01/2021 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் – 17 செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டிஇங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனைஅங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதைநங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய். விளக்கம் : மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், நான்முகனிடத்தும், பிற தேவர்களிடத்தும், எங்கும் மற்றவர்களிடத்தும் இல்லாததாகிய, […]

திருப்பாவை – பாசுரம் 16

31/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில்காப்பானே! கொடித்தோன்றும் தோரண வாயில்காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்; ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்; தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்; வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 15

30/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ? சில்லென்றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்; ‘வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!’ ‘வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!’ ‘ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?’ ‘எல்லோரும் போந்தாரோ?’ ‘போந்தார், போந்து எண்ணிக்கொள்’ வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாடேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 14

29/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்; செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர், தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்; எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருவெம்பாவை – பாசுரம் – 13

28/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் – 13 பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால் தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப் பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய். – மாணிக்கவாசகர் விளக்கம் : கரிய நிற குவளை மலர்கள் குளத்தின் […]

திருப்பாவை – பாசுரம் 13

28/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய், பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்; வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று; புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே, பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால் கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 12

27/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கிநினைத்து முலை வழியே நின்று பால் சோரநனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்பனித் தலை வீழ நின்வாசற் கடைபற்றிச்சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்றமனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்!  – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 11

26/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்துசெற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம்பொற்கொடியே புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின் முற்றம்புகுந்து முகில் வண்ணன் பேர் பாடசிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீஎற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 10

25/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 10 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும் தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலார் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 9

24/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 9 தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியதூபங்கமழத் துயிலணைமேல் கண்வளரும்மாமான் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்;மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?மாமாயன், மாதவன், வைகுந்தன், என்றென்றுநாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

1 2 3