தெரிந்ததுதும் தெரியாததும் – க்ஷேத்ரங்களும் இறைவனும்

17/10/2024 Sujatha Kameswaran 0

தெரிந்ததும் தெரியாததும் 1. கமலக்ஷேத்திரம் என்பது எது? அதன் சிறப்பு என்ன? 2. விஷ்ணு சுயமாகக் குடிகொண்ட தலங்கள் எத்தனை? அவை யாவை? 3. அப்பக்குடத்தான் எனற பெயருடன் விஷ்ணு காட்சியளிக்கும் இடம் எது? 4. விஷ்ணு ஜோதி வடிவமாகக் காட்சியளித்தது எங்கே? 5. விஷ்ணு ப்ரலகாசூரனை வதம் செய்தது எங்கே? 6 விஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்கள் யாவை? பதில்கள் 1. கமலக்ஷேத்திரம் என்பது திருக்கண்டியூரைக் குறிக்கும். ஹரசாபவிமோசனப் பெருமாள் […]

பிரதோஷ வகைகள்

19/03/2023 Sujatha Kameswaran 0

சிவபெருமானை வழிபடுவதற்கு பிரதோஷம் காலம் மிகச்சிறப்பானதாகக் கருதப்படுகிறது. 20 வகையான பிரதோஷங்கள் உள்ளன. 1. தினசரிப் பிரதோஷம் 2. பக்ஷப் பிரதோஷம் 3. மாசப் பிரதோஷம் 4. நக்ஷத்திரப் பிரதோஷம் 5. பூரணப் பிரதோஷம் 6. திவ்யப் பிரதோஷம் 7. தீபப் பிரதோஷம் 8. அபயப் பிரதோஷம் / சப்தரிஷிப் பிரதோஷம் 9. மகாப் பிரதோஷம் 10. உத்தம மகாப் பிரதோஷம் 11. ஏகாக்ஷரப் பிரதோஷம் 12. அர்த்தநாரிப் பிரதோஷம் […]

சிவன் – யோகி

01/06/2022 Sujatha Kameswaran 0

அண்டசராசரங்களில் முதல் யோகி, முதல் புலனடக்க வல்லமையுள்ளவர் சிவன். கழுத்தில் பாம்பு ஊர்ந்து கொண்டிருந்தாலும், தலையில் கங்கை ப்ரவாகம் செய்துகொண்டிருந்தாலும், நதிக்கரையோ, பனிமலையோ, மயானமோ எவ்விடமாக இருந்தாலும் மன்மதனே வந்து அம்பெய்தினாலும் எதற்கும் அசையாத, தளர்ந்துபோகாத, எதற்கும் தன் யோகநிலை மாறாதவர் சிவன். சஞ்சலத்திற்கோ, சலசலப்பிற்கோ புலன்களை சிதறடிக்காமல், ஏகாக்ர சித்தத்தில் தவம் புரியும் ஆதியோகி சிவன். ஓம் நம சிவாய||

எண்களின் சிறப்பு – எண் – 3

28/05/2021 Sujatha Kameswaran 0

எண் – 3 எண்கள் பலவகைகளில் நமக்குத் துணைபுரிகின்றன. அத்தகைய எண்களைப்பற்றியும் அவற்றின் சிறப்பைப்பற்றியும் அறிவது அவசியம். முதண்மை தெய்வங்கள் மூன்று தெய்வங்கள் பல இருப்பினும் முதண்மையாக மும்மூர்த்திகளையே (பிரம்மா, விஷ்ணு, சிவன்) குறிப்பிடுகிறோம். உயிரினங்கள் அனைத்திற்கும் குணங்கள் மூன்று. (சத்வம், ரஜஸ், தமஸ்) கரணங்கள் மூன்று மனசு, வாக்கு, காயம் காலங்கள் மூன்று இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்.

ஒரு வரியில் சில தெய்வங்கள்

21/05/2021 Sujatha Kameswaran 0

  ஒரு வரியில் சில தெய்வங்கள்:- ” சிரமாறு உடையான் “ 1. சிரம் மாறு உடையான் – தலையது மாறிவேழத்தின் சிரம் அமைந்த விநாயகனைக்குறிக்கும் 2 . சிரம் ஆறு(6)உடையான் – ஆறு முகம்படைத்த சுப்பிரமணியத்தைக்குறிக்கும் 3 . சிரம் ஆறு உடையான் – சிரத்தில் கங்கையை கொண்ட சிவனைக்குறிக்கும் 4 . சிரம் மாறு உடையான் – சிரமது முன்னும் பின்னும் உள்ள நான் முகனாம் பிரம்மாவைக்குறிக்கும் […]

திருவெம்பாவை – பாசுரம் – 15

30/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் – 15 ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து அணையாள் விண்ணோரைத் தான் பணியாள் பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும் ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள் வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய். – மாணிக்கவாசகர். விளக்கம் : அழகிய பெண்களே! நம் தோழி ’எம்பெருமானே!’ […]

திருவெம்பாவை – பாசுரம் 7

22/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 7 அன்னே இறையும் சிலவோ பல அமரர்உன்னற்கரியான் ஒருவன் இருஞ்சீரான்சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகொப்பாய்என்னானை என்னரையன் இன்னமுதென்றெல்லாமும்சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னந்துயிலுதியோவன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர் விளக்கம் : தாயினும் மேலான பெண்ணே! உனது சிறப்புத்தன்மைகளில் இந்த தூக்கமும் ஒன்றோ? தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும், மிகுந்த புகழுடையவன் என்றும், சிவனுக்குரிய திருநீறு, ருத்ராட்சம் […]

திருவெம்பாவை – பாசுரம் 5

20/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 5 மால் அறியா நான்முகனும் காணா மலையினை நாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ! கடைதிறவாய்! ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும் சீலமும் பாடிச் சிவனே சிவனே என்று ஓலம் இடினும் உணராய் உணராய் காண் ஏலக் குழலி பரிசு ஏலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர் விளக்கம் : (வந்தவர்கள், உறங்கியவளை எழுப்பிக் கூறுவது) திருமால் […]

ஸ்ரீ வித்யை

17/10/2020 Sujatha Kameswaran 0

ஸ்ரீ வித்யை என்பது மிகவும் உயர்வான உபாசனையாகும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் சில தனிச்சிறப்புகள் உண்டு. அனைத்து தெய்வங்களுள் சக்தியாய் அமையும் அம்பிகையைக் குறித்து தியானிக்க ஸ்ரீவித்யை ஒரு சிறந்த உபாயம். ஆண் தெய்வங்களுக்கான உபாசனா மார்க்கம் மந்த்ரம் என்றும், பெண் தெய்வங்களுக்கானது வித்யை என்றும் புராணங்கள் மூலம் அறியலாம். ஸ்ரீவித்யையின் பெருமையை வார்த்தைகளால் சொல்லி புரியவைப்பது கடினம். உணர்வுபூர்வமாக அறிவதே சிறந்தது. ஸமஸ்த(அனைத்து விதமான) மந்தரங்களுக்குள் ஸ்ரீவித்யை பிரதானமானது. ஸ்ரீவித்யையின் […]

ஒளவையாரின் இலக்கிய ஞானம்

30/08/2020 Sujatha Kameswaran 0

ஒளவையார் இறைவனின் அருளால், இலக்கிய ஞானமும், உலக அறிவில் மேம்பட்ட எண்ணமும் உடையவராய் திகழ்ந்தார். உலக வாழ்க்கை முறைப்பற்றியும், அதிலிருந்து மேம்பட்ட நிலையை அடைவதற்கான வழிகளையும் தம் இலக்கிய ஞானத்தின் துணைக்கொண்டு அனைவருக்கும் தெளிவுபடுத்தினார். அவற்றுள் ஒரு பகுதி: அரியது: அரிது அரிது மானிடர் ஆதல் அரிது;மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடுபேடு நீங்கிப் பிறத்தல் அரிது.பேடு நீங்கிப் பிறந்த காலையும்ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;ஞானமும் கல்வியும் நயந்த காலையும்தானமும் […]

1 2