மௌனம்

10/02/2020 Sujatha Kameswaran 0

மௌனம் என்பது மிகவும் மகத்துவமானது. வார்த்தைகளோ செய்கைகளோ ஏதும் இல்லாமல் அர்த்தத்தையும், கம்பீரத்தையும், பயத்தையும், எதிர்ப்பையும், துக்கத்தையும், ஆனந்தத்தையும், அவமானத்தையும் வெளிப்படுத்த சிறந்ததொரு உபாயம். பல நேரங்களில் வார்த்தைகள் விவாதத்தை வளர்க்கும். ஆனால் மௌனமோ அனைவரையும்…. அனைத்தையும்… யோசிக்கவைக்கும். இலக்கை அடைவதற்காக மனதையும் செயல்களையும் ஒருமுகப்படுத்தும் போது மௌனம் சக்தி தீவிரமாகப்போராடும் போது மௌனம் வலிமை. கற்ற வித்தையைக் கையாளும்போது மௌனம் பெருமிதம். எதிர்ப்பாராத தருணத்தில் நமக்குரிய பாராட்டையும் பரிசையும் […]

கொன்றை வேந்தன்

03/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 18. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. மற்றவரது குற்றத்தைக் கருதி அவர்களை ஒதுக்கினால், பிறகு நமக்கென யாரும் இருக்கமாட்டார். எனவே, அவர்களது குற்றத்தை நம்மால் இயன்ற அளவில் சரிசெய்யவேண்டும். 19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல். மிகவும் கூரான ஆயுதம் கையில் இருந்தாலும், அகந்தையுடன் வீரம் பேசக்கூடாது.

எண்ணங்கள் வண்ணங்கள்

01/05/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் செயல்படுத்தலின் செயல்முறைகள்: முதலில் இலட்சியத்தை சரிவர வரையறுத்துக் கொள்ளவேண்டும். பின்பு, அதனை அடைய என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்பதனைத் தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும். இவற்றிற்கான சாத்தியக்கூறுகளை, கணித்துக்கொள்வதுடன், செய்யவேண்டிய செலவுகள் மற்றும், அதற்குத்தேவையான மற்ற காரணிகளையும் முன்னமே திட்டமிட்டுக்கொள்வது நல்லது. “துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும்”. (குறள்- 651) ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும், செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும், என […]

ஆத்திசூடி

21/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 96. மை விழியார் மனை அகல்     – விலைமாதர் வீட்டிற்குப் போகக்கூடாது. 97. மொழிவது அறமொழி               – சொல்வதை, பிறர் சந்தேகங்கள் தீரும்படி விளக்கமாகக் கூறவேண்டும். 98. மோகத்தை முனி                         – வீண் ஆசைகளை வெறுத்து விலகவும். 99. வல்லமை பேசேல்         […]