திருப்பாவை – பாசுரம் 15

30/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ? சில்லென்றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்; ‘வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!’ ‘வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!’ ‘ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?’ ‘எல்லோரும் போந்தாரோ?’ ‘போந்தார், போந்து எண்ணிக்கொள்’ வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாடேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 13

28/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய், பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்; வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று; புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே, பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால் கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 12

27/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கிநினைத்து முலை வழியே நின்று பால் சோரநனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்பனித் தலை வீழ நின்வாசற் கடைபற்றிச்சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்றமனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்!  – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 11

26/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்துசெற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம்பொற்கொடியே புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின் முற்றம்புகுந்து முகில் வண்ணன் பேர் பாடசிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீஎற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருவெம்பாவை – பாசுரம் 10

25/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 10 பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவேபேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆருற்றார் ஆரயலார்ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர்      விளக்கம் :      தீயபண்புகள் இல்லாத குலத்தில் உதித்தவர்களும், கோயில் திருப்பணியையே சொந்தமாக்கிக் கொண்டவர்களுமான பெண்களே! நம் […]

திருப்பாவை – பாசுரம் 10

25/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 10 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும் தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலார் எம்பாவாய்! – ஆண்டாள்

திருவெம்பாவை – பாசுரம் 9

24/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 9 முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே!உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்!உன்னடியார் தாள்பணிவோம்! ஆங்கவர்க்கே பாங்காவோம்!அன்னவரே எங்கணவர் ஆவார்! அவர் உகந்துசொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர்   விளக்கம் :      எம்பெருமானே! நீ பழையைக்கெல்லாம் பழையான மூலப்பொருள். புதுமைகளுக்கெல்லாம் புதுமையான சிவபரம்பொருளே. புதுமைகளுக்கெல்லாம் புதுமையாக […]

திருப்பாவை – பாசுரம் 9

24/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 9 தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியதூபங்கமழத் துயிலணைமேல் கண்வளரும்மாமான் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்;மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?மாமாயன், மாதவன், வைகுந்தன், என்றென்றுநாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருவெம்பாவை – பாசுரம் 8

23/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 8 கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணைகேழில் விழுப்போருள்கள் பாடினோம் கேட்டிலையோ?வாழி! ஈதென்ன உறக்கமோ? வாய் திறவாய்!ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனைஏழை பங்காளானையே பாடேலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர் விளக்கம் : தோழியை எழுப்ப வந்த பெண்கள், அன்புத்தோழியே! கோழி கூவிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன. வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன.  கோயிலில் வெண் சங்குகள் […]

திருப்பாவை – பாசுரம் 6

21/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 6 புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டுகள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சிவெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினைஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

1 2