ஆசாரக் கோவை

19/04/2023 Sujatha Kameswaran 0

ஆசாரக்கோவை என்னும் இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுல் ஒன்றாகும். இந்நூலில் ஆசிரியர் வண்கயத்தூர் என்ற ஊரில் வாழ்ந்த பெருவாயின் முள்ளியார். இந்த நூலின் மூலநூல் ‘ஆரிடம்’ என்னும் வடமொழி நூலாகும். இதில் உள்ள ஆசாரங்கள் ‘சுக்ர ஸ்மிருதி’ எனும் நூலில் உள்ளவை ஆகும். நல்லொழுக்கம் ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள் ஒருமனதோடு செய்யவேண்டியவை விடியற்காலையில் செய்யவேண்டியவை எச்சிலுடன் தொடக்கூடாதவை காணக்கூடாதவை நால்வகை எச்சில் எச்சிலுடன் செய்யக்கூடாதவை காலை மற்றும் மாலையில் கடவுளை […]

கொன்றை வேந்தன்

27/05/2016 Sujatha Kameswaran 2

கொன்றை வேந்தன் 66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம். அறிந்தும் அறியாததுபோல் அடங்கி நடப்பதே, பெண்களுக்கு சிறந்த அணிகலனாகும். 67. பையச் சென்றால் வையம் தாங்கும். ஒருவர் கோபமடையாமல், பொறுமையுடன் செயல்பட்டால், அவரை இவ்வுலகம் போற்றும்.

கொன்றை வேந்தன்

15/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும். கணவனைப் பற்றி அவதூறு பேசும் பெண்ணை, அக்குடும்பத்தின் எமன் என்று எனலாம். 43. தெய்வம் சீறின் கைதவம் மாளும். தெய்வத்தின் கோபத்திற்கு ஆளானால், முன்னர் தவம் செய்து பெற்ற புண்ணியம் அனைத்தும் அழிந்துபோகும்.

கொன்றை வேந்தன்

14/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 40. தீராக் கோபம் போராய் முடியும். நீங்காத பெருங்கோபம், இறுதியில் பெரும் போர் ஏற்படச்செய்யும். 41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு. கணவனின் துன்பம் கண்டு துடிக்காத பெண், அடிவயிற்றில் கட்டிய நெருப்பைப் போன்றவளாவாள்.

கொன்றை வேந்தன்

01/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 14. கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை. கற்பு என்பது, நடத்தைத் தவறாமையாகும். 15. காவல்தானே பாவையர்க்கு அழகு. நல்லொழுக்கம் தவறாமல், தன்னைக் காத்துக்கொள்வது பெண்களுக்கு சிறப்பானதாகும்.

கொன்றை வேந்தன்

26/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர். கஞ்சத்தனத்துடனும், பிறருக்குத் தரக்கூடாது என்கிற எண்ணத்துடனும் சேர்த்து வைக்கும் செல்வமானது திருடர்களால் அபகரிக்கப்படும். 5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு. குறைந்த அளவு உணவு உண்பதே பெண்களுக்கு அழகைத்தரும்.