திருப்பாவை – பாசுரம் 13

28/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய், பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்; வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று; புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே, பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால் கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 11

26/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்துசெற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம்பொற்கொடியே புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின் முற்றம்புகுந்து முகில் வண்ணன் பேர் பாடசிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீஎற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 10

25/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 10 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும் தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலார் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 9

24/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 9 தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியதூபங்கமழத் துயிலணைமேல் கண்வளரும்மாமான் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்;மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?மாமாயன், மாதவன், வைகுந்தன், என்றென்றுநாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 8

23/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 8 கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடுமேய்வாய் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்கூவுவான் வந்து நின்றோம், கோதுலகமுடையபாவாய்! எழுந்திராய், பாடிப் பறைகொண்டுமாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டியதேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்ஆவாவென்றாராய்ந் தருளேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 6

21/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 6 புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டுகள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சிவெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினைஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை

19/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 4 ஆழிமழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்ஆழியுட்புக்கு முகந்து கொடார்த்தேறிஊழி முதல்வனுருவம்போல் மெய்கறுத்துப்பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்ஆழிபோல் மின்னிவலம்புரிபோல் நின்றதிர்ந்துதாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை

18/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 3 ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்குபெரும் செந்நெல் ஊடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத் தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை

17/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 2 வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்பையத்துயின்ற பரமனடி பாடிநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடிமையிட்டெழுதோம் மலரிட்டுநாம் முடியோம்செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டிஉய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

1 2