கொன்றை வேந்தன்

04/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும். மழைப் பொழிவது குறைந்து போனால், நாட்டு வளம் குறையும் காரணத்தால், மக்களிடம் கொடைக்குணமும் குறைந்துவிடும். 83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம். விருந்தினர்களை உபசரிக்காதவர்களிடம் இல்லறத்தின் நற்பண்புகள் இருக்காது.

கொன்றை வேந்தன்

29/05/2016 Sujatha Kameswaran 2

கொன்றை வேந்தன் 70. மருந்தேயாயினும் விருந்தோடு உண். இறப்பில்லா வாழ்வு தரும் அமுதமே ஆனாலும், விருந்தினர்க்கும் பகிர்ந்து அளித்து உண்ணவேண்டும். 71. மாரி அல்லது காரியம் இல்லை. மழை தக்கக் காலத்தில் பெய்யாவிடில் அதனைச் சார்ந்த வேலைகள் ஏதும் நடைப்பெறாது.