உழவாரப்பணி

19/05/2021 Sujatha Kameswaran 0

உழவாரப்பணி: கோயிலை சுத்தப்படுத்துவது உழவாரப்பணியாகும். இதைச் செய்ய தோசைக்கரண்டி வடிவில் ஒரு கருவியைப்பயன்படுத்துவர் இதற்கு, ‘உழவாரப் படை’ என்று பெயர். திருக்கோவில்களில் சூழ்ந்திருக்கும் ஒட்டடைகள் மற்றும் அழுக்குகளை நீக்குவது. எண்ணெய் பிசுக்கினால் அழுக்குப் படிந்த விளக்குகளை சுத்தம் செய்தல். வாரம் ஒருமுறை திருக்கோயிலை பசுஞ்சாணம் இட்டு மொழுகுதல். கோவிலுக்கு வருவோர் போடும் குப்பைகளை குப்பைக் கூடைகளைப் போடுவது. அவ்வாறு ஆங்காங்கேக் குப்பைப்போடுபவரை குப்பைத்தொட்டியில் போடச்செய்வது.கோபுரங்களில், மதில்சுவர்களில் முளைத்திருக்கும் செடிகளை அகற்றுதல். […]

திருமால் பெருமை

20/11/2016 Sujatha Kameswaran 1

திருமால் திருப்பதி ஸ்ரீவேங்கடேச பெருமாளின் சிலை வடிவம் அற்புதம் நிறைந்தது. பொதுவாகக் கருங்கற்சிலைகளில் சிற்பியின் உளிபட்ட இடம் தெரியும். செதுக்கியிருப்பதன் அடையாளம் தெரியும். ஆனால் ஏழுமலையானின் திருவுருவச்சிலையில் அவ்வாறான எவ்வித அடையாளமும் தெரியவில்லை என்பது அவருக்கு பூஜை மற்றும் அபிஷேகம் செய்யும் பூஜாரிகளின் தகவல். மேலும், திருவுருவச்சிலையில் நெற்றிச்சுட்டி, நாகாபரணங்கள், காதணிகள், புருவங்கள், விரல்கள் அனைத்தும் பளப்பளப்போடு திகழ்கின்றன. வேங்கடாசலபதியின் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தில் இருக்கிறது. […]