திருப்பாவை – பாசுரம் 24

08/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி, சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி, பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி, கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி, குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி, வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி, என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம், இரங்கேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

கொன்றை வேந்தன்

06/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 24. கோட்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு. கோள் சொல்லை விரும்புபவர்களிடம், கோள் மூட்டி விடுவது, காற்றோடு நெருப்பானது சேர்வதுபோல அழிவைத் தரும். 25. கெளவை சொல்லின் எவ்வருக்கும் பகை. மற்றவர்கள் மீது குற்றம் சொல்லிக்கொண்டே இருந்தால், எல்லோரிடமும் பகைமையே ஏற்படும்.