திருக்குறள்

07/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 35. அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம் (1-4-5) பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைத் தவிர்த்து வாழ்வதே அறமாகும். Azhukkaa ravaaveguli innaachchol naangum izhukkaa iyandra dharam. That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech

கொன்றை வேந்தன்

06/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 24. கோட்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு. கோள் சொல்லை விரும்புபவர்களிடம், கோள் மூட்டி விடுவது, காற்றோடு நெருப்பானது சேர்வதுபோல அழிவைத் தரும். 25. கெளவை சொல்லின் எவ்வருக்கும் பகை. மற்றவர்கள் மீது குற்றம் சொல்லிக்கொண்டே இருந்தால், எல்லோரிடமும் பகைமையே ஏற்படும்.

திருக்குறள்

06/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 34. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற(1-4-4) ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். இது ஒருவகை அறம் ஆகும். மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை. Manaththukkan maasilan aadhal anaitharan aagula neera pira Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all […]

கொன்றை வேந்தன்

03/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 18. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. மற்றவரது குற்றத்தைக் கருதி அவர்களை ஒதுக்கினால், பிறகு நமக்கென யாரும் இருக்கமாட்டார். எனவே, அவர்களது குற்றத்தை நம்மால் இயன்ற அளவில் சரிசெய்யவேண்டும். 19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல். மிகவும் கூரான ஆயுதம் கையில் இருந்தாலும், அகந்தையுடன் வீரம் பேசக்கூடாது.