கொன்றை வேந்தன்

02/06/2016 Sujatha Kameswaran 2

கொன்றை வேந்தன் 78. மைவிழியார்தம் மனையகன்று ஒழுகு. மைதீட்டிய கண்களால் ஆண்களை மயக்கி இழுக்கும் விலைமகளிரின் வீட்டை நெருங்காமல் வாழவேண்டும். 79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம். பெரியோர்களின் அனுபவ உரையைக் கேட்காமல் செய்கின்ற செயல்கள் கெட்டுப்போகும்.

கொன்றை வேந்தன்

27/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும். ஊர்மக்கள் அனைவருடனும் விரோதம் கொண்டால், வம்சத்தின் அனைவரும் கெட்டொழிய நேரும். 7. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எண்களை அடிப்படையாகக்கொண்ட கணிதமும், எழுத்துக்களை அடிப்படையாகக்கொண்ட அறநூல்களும் கண்களுக்கிணையான முக்கியத்துவம் வாய்ந்தவை.