ஒளவையாரின் இலக்கிய ஞானம்

30/08/2020 Sujatha Kameswaran 0

ஒளவையார் இறைவனின் அருளால், இலக்கிய ஞானமும், உலக அறிவில் மேம்பட்ட எண்ணமும் உடையவராய் திகழ்ந்தார். உலக வாழ்க்கை முறைப்பற்றியும், அதிலிருந்து மேம்பட்ட நிலையை அடைவதற்கான வழிகளையும் தம் இலக்கிய ஞானத்தின் துணைக்கொண்டு அனைவருக்கும் தெளிவுபடுத்தினார். அவற்றுள் ஒரு பகுதி: அரியது: அரிது அரிது மானிடர் ஆதல் அரிது;மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடுபேடு நீங்கிப் பிறத்தல் அரிது.பேடு நீங்கிப் பிறந்த காலையும்ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;ஞானமும் கல்வியும் நயந்த காலையும்தானமும் […]

கலி காலம்

01/03/2020 Sujatha Kameswaran 0

புராணங்களின் மூலமாக கலியுகம் அதாவது கலிகாலம் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றியத் தகவல்களை தெரிந்துகொள்வோம். கலியுகத்தில் நிகழக்கூடியதை காகபுஜண்டர் கருடனுக்குக் கூறியதாக சில விவரங்கள் ராமாயணத்தில் உத்திரகாண்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. அவை, கலியுகத்தில் மக்களுக்கு மனம்போனபடி நடப்பதே மார்க்கம் என்றாகிவிடும். தங்கள் லாபத்துக்காக மக்களுக்கு பலவிதமான நெறிமுறைகளை எடுத்துச்சொல்லும் புனித நூல்கள் மறைக்கப்படும். தர்மசெயல்கள் எல்லாம் பேராசையாலும், தீய தூண்டுதல்களாலும் மாற்றப்படும். தற்பெருமை, சுய விளம்பரம் தேடுபவர்கள் அறிஞர்கள் என்று போற்றப்படுவர். […]

இந்தியாவின் நிலை?!

27/04/2017 Sujatha Kameswaran 0

விளைப்பொருட்களின் பயன்பாடுதான் இப்படி என்றால், மனித வளம் பெரும்பாலும் இழிவு மற்றும் கொச்சைப்படுத்தப்படுகிறது. கூலித்தொழிலாளி முதல் குபேரன் வரை தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டும் மற்றவர்களை ஏமாற்றிக்கொண்டும் வாழ்கின்றனர். இதனாலேயே தனிமனித உழைப்பும், மரியாதையும் இல்லாமல் முகத்தின் முன்னால் ஒன்றும், முதுகின் பின்னால் மற்றொன்றும் நிகழ்கின்றன. சிறு பொருட்கள் முதல் மிகப்பெரிய பொருட்கள் வரை தரம் குறைவாகவும் சிறு தொழில் முதல் பெரிய தொழில்கள் வரை அனைத்திலும் பெரும்பாலும் தரம் குறைவு. பணம் […]

விடுகதையா இந்த வாழ்க்கை? இளம்பருவம்

20/10/2016 Sujatha Kameswaran 0

இளம் பருவம் வாழ்க்கைச் சக்கரத்தின் ஒவ்வொரு நிலையும், அழகானது, இனிமையானது மற்றும் வியப்பானது. இவற்றில் இளம்பருவம் என்பது மிகவும் வியப்பானது, சிலநேரங்களில் அபாயகரமானதும், மொத்தத்தில் அவ்விளம்பிராயத்தினருக்கும் அவர்களைச் சுற்றியுள்ளோருக்கும் பெரும் சவாலான பருவம் அது. இப்பருவத்தில் உள்ளோரை அவரைச்சார்ந்தோர் புரிந்துகொண்டு, அனுசரித்து, அரவணைத்துச் சென்றால் இந்நிலையை இனிதே கடக்கலாம். மற்றவர்கள் நம்மைப்புரிந்து கொள்ளவில்லை என்ற எண்ணம் இளம்பருவத்தினரிடம் ஓங்கி நிற்கிறது. இவ்வயதினரின் கருத்துக்களை முதலில் கேட்டு பின்பு அதில் உள்ள […]

கொன்றை வேந்தன்

08/06/2016 Sujatha Kameswaran 2

கொன்றை வேந்தன் 90. ஒத்த இடத்து நித்திரை செய். மேடு பள்ளம் ஏதும் இல்லாத சமதள இடத்தில் உறங்கவேண்டும். 91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம். அறம் கூறும் நூல்களைப் படித்தறியாதவர்களிடம் நல்ல சிந்தனை, ஒழுக்கமான செயல்கள் இருக்காது.

கொன்றை வேந்தன்

04/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும். மழைப் பொழிவது குறைந்து போனால், நாட்டு வளம் குறையும் காரணத்தால், மக்களிடம் கொடைக்குணமும் குறைந்துவிடும். 83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம். விருந்தினர்களை உபசரிக்காதவர்களிடம் இல்லறத்தின் நற்பண்புகள் இருக்காது.

கொன்றை வேந்தன்

29/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 10. ஒருவனைப் பற்றி ஓரகத் திரு. பெண்ணானவள், நல்ல ஆண் ஒருவனைத் தேர்ந்தெடுத்து, அவனுடன் ஓரே வீட்டில் இன்பமாய் வாழவேண்டும். 11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம். வேதங்களை நன்கு ஓதுவதே, அந்தணர்களுக்கு மிகச்சிறந்த ஒழுக்கமாகும்.