திருப்பாவை – பாசுரம் 15

30/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ? சில்லென்றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்; ‘வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!’ ‘வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!’ ‘ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?’ ‘எல்லோரும் போந்தாரோ?’ ‘போந்தார், போந்து எண்ணிக்கொள்’ வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாடேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

மௌனம்

10/02/2020 Sujatha Kameswaran 0

மௌனம் என்பது மிகவும் மகத்துவமானது. வார்த்தைகளோ செய்கைகளோ ஏதும் இல்லாமல் அர்த்தத்தையும், கம்பீரத்தையும், பயத்தையும், எதிர்ப்பையும், துக்கத்தையும், ஆனந்தத்தையும், அவமானத்தையும் வெளிப்படுத்த சிறந்ததொரு உபாயம். பல நேரங்களில் வார்த்தைகள் விவாதத்தை வளர்க்கும். ஆனால் மௌனமோ அனைவரையும்…. அனைத்தையும்… யோசிக்கவைக்கும். இலக்கை அடைவதற்காக மனதையும் செயல்களையும் ஒருமுகப்படுத்தும் போது மௌனம் சக்தி தீவிரமாகப்போராடும் போது மௌனம் வலிமை. கற்ற வித்தையைக் கையாளும்போது மௌனம் பெருமிதம். எதிர்ப்பாராத தருணத்தில் நமக்குரிய பாராட்டையும் பரிசையும் […]

கொன்றை வேந்தன்

08/06/2016 Sujatha Kameswaran 2

கொன்றை வேந்தன் 90. ஒத்த இடத்து நித்திரை செய். மேடு பள்ளம் ஏதும் இல்லாத சமதள இடத்தில் உறங்கவேண்டும். 91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம். அறம் கூறும் நூல்களைப் படித்தறியாதவர்களிடம் நல்ல சிந்தனை, ஒழுக்கமான செயல்கள் இருக்காது.

கொன்றை வேந்தன்

01/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு. இலவம் பஞ்சு மெத்தையில் உறங்குவது ஆழ்ந்த உறக்கத்தையும், ஆரோக்கியத்தையும் தரும். 77. மேழிச் செல்வம்படாது. உழவுத் தொழிலால் வரும் செல்வம் ஒருநாளும் அழிந்து போகாது.

கொன்றை வேந்தன்

16/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும். மேற்கொண்டு பொருளைச் சேர்ப்பதற்கு முயற்சி செய்யாமல், தன்னிடம் இருக்கும் செல்வத்தை செலவு செய்வது, அழிவைத்தரும். 45. தையும் மாசியும் வையகத்து உறங்கு. பனிபொழியும் மாதங்களான தை மற்றும் மாசியில், வைக்கோலால் வேயப்பட்ட வீட்டில் உறங்கவேண்டும்.

கொன்றை வேந்தன்

10/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 32. செய்தவம் முதிர்ந்தால் கைதவம் மாளும். தவவாழ்க்கை முதிர்ச்சியடைந்தால், துன்பங்கள் விலகிவிடும். 33. சேமம் புகினும் யாமத்து உறங்கு. காவல் பணி புரிபவராயினும், நடு இரவில் சிறிது நேரமாவது உறங்க வேண்டும்.