கொன்றை வேந்தன்

24/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண். பால் சேர்ந்த நல்ல உணவாக இருப்பினும், பசி தோன்றிய பின்னரே உண்ணவேண்டும். அதனை உண்ணும் நேரம் அறிந்தே உண்ணவேண்டும். 61. பிறன்மனை புகாமை அறமெனத் தகும். பிறர்மனைவி மீது ஆசைக்கொள்ளாமலும், பிறர் குடித்தனத்தைக் கெடுக்காமல் இருத்தலும் சிறந்த அறமாகும்.

கொன்றை வேந்தன்

17/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது. மற்றவரிடம் கெஞ்சிக்கேட்டு(பிச்சையெடுத்து) உண்பதைவிட, தானே உழுது அல்லது உழைத்து உண்ணலாம். 47. தோழனோடும் ஏழைமை பேசேல். நெருங்கிய நண்பரிடம்கூட உனது வறுமை நிலையை வெளிப்படுத்திப் புலம்பக்கூடாது.