சிவன் – யோகி

01/06/2022 Sujatha Kameswaran 0

அண்டசராசரங்களில் முதல் யோகி, முதல் புலனடக்க வல்லமையுள்ளவர் சிவன். கழுத்தில் பாம்பு ஊர்ந்து கொண்டிருந்தாலும், தலையில் கங்கை ப்ரவாகம் செய்துகொண்டிருந்தாலும், நதிக்கரையோ, பனிமலையோ, மயானமோ எவ்விடமாக இருந்தாலும் மன்மதனே வந்து அம்பெய்தினாலும் எதற்கும் அசையாத, தளர்ந்துபோகாத, எதற்கும் தன் யோகநிலை மாறாதவர் சிவன். சஞ்சலத்திற்கோ, சலசலப்பிற்கோ புலன்களை சிதறடிக்காமல், ஏகாக்ர சித்தத்தில் தவம் புரியும் ஆதியோகி சிவன். ஓம் நம சிவாய||

பரதநாட்டியம்

03/04/2018 Sujatha Kameswaran 0

இசைத்துறை சார்ந்த கலைகளில் ஓர் அற்புதமான கலை நமது பரதநாட்டியம். மற்ற அனைத்து இசை சார்ந்த கலைகளிலும், சில உறுப்புகளின் ஒத்துழைப்பு இருந்தாலே போதுமானது. ஆனால் பரதநாட்டியத்தில் வெளிஉறுப்புகள் மட்டுமல்லாது, எண்ணமும் ஒரே சித்தமாய் ஒரே பாதையில் அமையவேண்டும். பாட்டின் தன்மைக்கேற்ப முகம் சிறந்த உணர்ச்சிகளையும், கைகள் மற்றும் கால்கள் பாடலுக்கேற்ற அபிநயத்தையும், காட்டவேண்டுமானால் எண்ணமும் அப்பாட்டிற்கேற்பவே பயணிக்கவேண்டும். இவ்வாறு அனைத்தையும் ஒருங்கிணைத்து செய்தாலே இக்கலை பரிபூரணமாகும். சரியாக சொல்வதானால் […]