கொன்றை வேந்தன்

01/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு. இலவம் பஞ்சு மெத்தையில் உறங்குவது ஆழ்ந்த உறக்கத்தையும், ஆரோக்கியத்தையும் தரும். 77. மேழிச் செல்வம்படாது. உழவுத் தொழிலால் வரும் செல்வம் ஒருநாளும் அழிந்து போகாது.

கொன்றை வேந்தன்

16/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும். மேற்கொண்டு பொருளைச் சேர்ப்பதற்கு முயற்சி செய்யாமல், தன்னிடம் இருக்கும் செல்வத்தை செலவு செய்வது, அழிவைத்தரும். 45. தையும் மாசியும் வையகத்து உறங்கு. பனிபொழியும் மாதங்களான தை மற்றும் மாசியில், வைக்கோலால் வேயப்பட்ட வீட்டில் உறங்கவேண்டும்.

கொன்றை வேந்தன்

06/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 24. கோட்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு. கோள் சொல்லை விரும்புபவர்களிடம், கோள் மூட்டி விடுவது, காற்றோடு நெருப்பானது சேர்வதுபோல அழிவைத் தரும். 25. கெளவை சொல்லின் எவ்வருக்கும் பகை. மற்றவர்கள் மீது குற்றம் சொல்லிக்கொண்டே இருந்தால், எல்லோரிடமும் பகைமையே ஏற்படும்.

கொன்றை வேந்தன்

30/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு. மற்றவர் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமையால் பேசுவது, நாம் பெற்றுள்ள நல்லனவற்றை அழித்து விடும். 13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு. சிக்கனமாக வாழ்க்கை நடத்தி, செல்வத்தை சேர்க்கவேண்டும்.