கொன்றை வேந்தன்

05/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும். வீரனுடனான நட்பானது, நம் கையில் கூரான அம்பு இருப்பதற்குச் சமம். 85. உரவோர் என்கை இரவாது இருத்தல். மன உறுதி என்பது, பிறரிடம் சென்று எதையும் யாசிக்காமல் இருப்பதாகும்.

கொன்றை வேந்தன்

03/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 18. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. மற்றவரது குற்றத்தைக் கருதி அவர்களை ஒதுக்கினால், பிறகு நமக்கென யாரும் இருக்கமாட்டார். எனவே, அவர்களது குற்றத்தை நம்மால் இயன்ற அளவில் சரிசெய்யவேண்டும். 19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல். மிகவும் கூரான ஆயுதம் கையில் இருந்தாலும், அகந்தையுடன் வீரம் பேசக்கூடாது.