கொன்றை வேந்தன்

18/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 48. நல்லிணக்கம் அல்லது அல்லல் படுத்தும். நற்குணம் கொண்டவர்களை விட்டு, தீயவர்களிடம் கொள்ளும் நட்பு துன்பத்தையே தரும். 49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை. நாட்டு மக்கள் அனைவரும் குறையின்றி வாழ்ந்தால், அந்நாட்டில் தீமைகள் ஏதும் இருக்காது.

கொன்றை வேந்தன்

17/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது. மற்றவரிடம் கெஞ்சிக்கேட்டு(பிச்சையெடுத்து) உண்பதைவிட, தானே உழுது அல்லது உழைத்து உண்ணலாம். 47. தோழனோடும் ஏழைமை பேசேல். நெருங்கிய நண்பரிடம்கூட உனது வறுமை நிலையை வெளிப்படுத்திப் புலம்பக்கூடாது.

கொன்றை வேந்தன்

15/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும். கணவனைப் பற்றி அவதூறு பேசும் பெண்ணை, அக்குடும்பத்தின் எமன் என்று எனலாம். 43. தெய்வம் சீறின் கைதவம் மாளும். தெய்வத்தின் கோபத்திற்கு ஆளானால், முன்னர் தவம் செய்து பெற்ற புண்ணியம் அனைத்தும் அழிந்துபோகும்.

கொன்றை வேந்தன்

14/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 40. தீராக் கோபம் போராய் முடியும். நீங்காத பெருங்கோபம், இறுதியில் பெரும் போர் ஏற்படச்செய்யும். 41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு. கணவனின் துன்பம் கண்டு துடிக்காத பெண், அடிவயிற்றில் கட்டிய நெருப்பைப் போன்றவளாவாள்.

கொன்றை வேந்தன்

13/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 38. தாயிற்சிறந்ததொரு கோயிலும் இல்லை. பெற்ற தாயைவிட சிறந்த வணங்கத்தக்க கோயில் இல்லை.   39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு. கடல் தாண்டி வெளிநாடு சென்றாவது, பொருள் ஈட்டவேண்டும்.  

கொன்றை வேந்தன்

12/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர். சோம்பல் குணம் கொண்டவர், வறுமையடைந்து துன்புறுவர். 37. தந்தைசொல் மிக்க மந்திரமில்லை. தந்தை கூறும் அறிவுரையைவிட, மேலான நல்லது ஒன்றுமில்லை.    

கொன்றை வேந்தன்

11/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 34. சையொத்திருந்தால் ஐயம் இட்டுண். மற்றவர்க்கு உதவும் அளவில் பொருள் இருந்தால், இல்லாதவர்க்கு இயன்றவரை, தான தர்மம் செய்துவிட்டு, உண்ணவேண்டும். 35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர். நல்ல மனம் உடையவர், இறுதியில் நற்கதியே அடைவர்.

கொன்றை வேந்தன்

10/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 32. செய்தவம் முதிர்ந்தால் கைதவம் மாளும். தவவாழ்க்கை முதிர்ச்சியடைந்தால், துன்பங்கள் விலகிவிடும். 33. சேமம் புகினும் யாமத்து உறங்கு. காவல் பணி புரிபவராயினும், நடு இரவில் சிறிது நேரமாவது உறங்க வேண்டும்.

கொன்றை வேந்தன்

09/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 30. சுற்றத்திற்கழகு சூழவிருத்தல். இன்பத்திலும் துன்பத்திலும், விலகாது உடனிருத்தலே உறவினர்களுக்கு சிறப்பாகும். 31. சூதும் வாதும் வேதனை செய்யும். சூதாட்டம் ஆடுவதும், வீணாக விவாதம் செய்வதும் துன்பத்தையேத் தரும்.

கொன்றை வேந்தன்

08/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 28. சிவத்தைப் பேணின் தவத்திற்கு அழகு. அனைத்தும் சிவமயம் என்றுக் கருதிப் போற்றுவதே, தவம் செய்பவர்க்கு மேன்மையாகும். 29. சீரைத் தேடின் ஏரைத் தேடு. சிறந்த வாழ்க்கை வேண்டுமெனில், உழவுத்தொழிலைச் செய்து வாழவேண்டும்.

1 2 3 4 5