கொன்றை வேந்தன்

29/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 10. ஒருவனைப் பற்றி ஓரகத் திரு. பெண்ணானவள், நல்ல ஆண் ஒருவனைத் தேர்ந்தெடுத்து, அவனுடன் ஓரே வீட்டில் இன்பமாய் வாழவேண்டும். 11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம். வேதங்களை நன்கு ஓதுவதே, அந்தணர்களுக்கு மிகச்சிறந்த ஒழுக்கமாகும்.

கொன்றை வேந்தன்

28/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 8. ஏவா மக்கள் மூவா மருந்து. பெற்றோர் குறிப்பறிந்து செயல்படும் மக்கள் பிணிதீர்க்கும் மருந்தைப் போன்றவர்கள். 9. ஐயம் புகினும் செய்வன செய். பிச்சை எடுத்து வாழவேண்டிய நிலை ஏற்படினும், நற்செயல்களைச் செய்யவேண்டும்.

கொன்றை வேந்தன்

27/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும். ஊர்மக்கள் அனைவருடனும் விரோதம் கொண்டால், வம்சத்தின் அனைவரும் கெட்டொழிய நேரும். 7. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எண்களை அடிப்படையாகக்கொண்ட கணிதமும், எழுத்துக்களை அடிப்படையாகக்கொண்ட அறநூல்களும் கண்களுக்கிணையான முக்கியத்துவம் வாய்ந்தவை.

கொன்றை வேந்தன்

26/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர். கஞ்சத்தனத்துடனும், பிறருக்குத் தரக்கூடாது என்கிற எண்ணத்துடனும் சேர்த்து வைக்கும் செல்வமானது திருடர்களால் அபகரிக்கப்படும். 5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு. குறைந்த அளவு உணவு உண்பதே பெண்களுக்கு அழகைத்தரும்.

கொன்றை வேந்தன்

25/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது மிகவும் சிறந்த செயலாகும். 3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று. அறம் சார்ந்த நல்ல குடும்பவாழ்க்கை இவ்வுலகில் இல்லையெனில், பிற நல்ல அறங்கள் ஏதும் இருக்காது.

1 3 4 5