பஞ்ச பூதத்தலங்கள்

பஞ்ச பூதத்தலங்கள்

மண்/நிலம் (ப்ருத்வி), நீர் (அப்பு), நெருப்பு (தேயு), காற்று (வாயு), ஆகாயம் (ஆகாஷம்) ஆகிய ஐம்பூதங்களிலும் பரந்து விளங்குவதே சிவலிங்கம் ஆகும்.

இதனை அனைவருக்கும் உணர்த்தும் பொருட்டு இவ்வைம்பெரும் பூதங்களின் அடிப்படையில் ஐந்து தலங்களை அமைத்தனர் நம் முன்னோர்கள்.

காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் (மண்), திருவானைக்காவல் (நீர்), திருவண்ணாமலை (நெருப்பு), காளஹஸ்தி (காற்று), சிதம்பரம் (ஆகாயம்) என தமிழகத்தின் வடப்பகுதியில் அமைந்துள்ள ஆலயங்களாகும்.

இவைப்போன்றே பாண்டியநாட்டின் தென்பகுதியிலும் பஞ்சபூதத்தலங்கள் அமைந்துள்ளன.

அவை,
சங்கரன்கோவில் (மண்), தாருகாபுரம் (நீர்), கரிவலம் வந்த நல்லூர் (நெருப்பு), தென்மலை (காற்று), தேவதானம் (ஆகாயம்) என இவையனைத்துமே சிவன் தலங்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*