எண்ணங்கள் வண்ணங்கள்

எண்ணங்கள் வண்ணங்கள்

செயல்படுத்தலின் செயல்முறைகள்:

முதலில் இலட்சியத்தை சரிவர வரையறுத்துக் கொள்ளவேண்டும். பின்பு, அதனை அடைய என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்பதனைத் தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும்.

இவற்றிற்கான சாத்தியக்கூறுகளை, கணித்துக்கொள்வதுடன், செய்யவேண்டிய செலவுகள் மற்றும், அதற்குத்தேவையான மற்ற காரணிகளையும் முன்னமே திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

“துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்”. (குறள்- 651)

ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும், செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும், என மேற்கண்ட குறளின் கருத்திற்கிணங்க, நம்முடைய அறிவையும், திறனையும் மேம்படுத்திக்கொண்டு, அதனுடன், நமது பணியாளர்களின் திறனைப்பற்றியும் நன்கு தெரிந்துகொள்ளவேண்டும்.

இதன்மூலம், இலட்சியப் பாதையை திட்டமிடலாம்.

எண்ணங்கள் தொடரும்…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*