எண்ணங்கள் வண்ணங்கள்

எண்ணங்கள் வண்ணங்கள்

வெற்றிகுறித்த மனநிலை:
என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்ற வாக்கின்படி, நாம் எதைக்குறித்து அதிகமாக நினைக்கிறோமோ அதன் சாயல் நம்மிடம் தோன்றும்.

எனவே நாம் புரியவேண்டிய செயல்கள் பற்றிய அறிவுடன் நம் சிந்தனைகளை அச்செயல்களைக் குறித்து ஒருமுகப்படுத்தவேண்டும்.

செய்யவேண்டியவைக்குறித்த மனத்தெளிவும், மனத்துணிவும், நம்மை இலக்கின் அடுத்தகட்டத்திற்கு கொண்டுசென்றுவிடும். லட்சியப்பாதையில் மனதை நீடிக்கசெய்வதே முதல் காரியம்.

உடலும், மனமும் ஒருங்கிணைந்து செயல்படும்போது, பலன் விரைவில் கிட்டும்.
நமது விருப்பம், ஆற்றல் இவற்றை ஒருங்கிணைத்து கொள்ளவேண்டும். சூழ்நிலையை நம் இலக்கை அடைய ஏதுவாய் சீர்செய்துகொண்டு விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

எண்ணங்கள் தொடரும்…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*