திருப்பாவை – பாசுரம் 21

திருப்பாவை

ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்;

ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்;

மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்

ஆற்றாதுவந்து உன்னடிபணியுமாபோலே,

போற்றியாம், வந்தோம், புகழ்ந்தேலோர் எம்பாவாய்!

– ஆண்டாள்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*