திருப்பாவை – பாசுரம் 9

திருப்பாவை – பாசுரம் 9

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபங்கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்;
மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன், மாதவன், வைகுந்தன், என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்!

– ஆண்டாள்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*