பஜகோவிந்தம் – 12

பஜகோவிந்தம் – 12

கர்வம் கூடாது

மாகுரு தந ஜந யௌவந கர்வம்
ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம் |
மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா
ப்ரஹ்மபதம் த்வம் ப்ரவிச விதித்வா ||

பதவுரை:

மாகுரு                                  : செய்யாதே (கொள்ளாதே)

தந ஜந யௌவந               : சுற்றம், பணம், இளமை முதலான         

                                                   காரணங்களால்

கர்வம்                                  : கர்வத்தை

ஹரதி                                  : எடுத்துச்சென்றுவிடும்

நிமேஷாத்                          : ஒரே நிமிடத்திற்குள்

கால:                                     : காலம்

ஸர்வம்                                 : அனைத்தையும்

மாயாமயம் (என்று)        : மாயையைக்கொண்டது (என்று)

இதம்                                     : இது

அகிலம்                                : எல்லாம்

ஹித்வா                               : விட்டுவிட்டு

ப்ரஹ்மபதம்                      : ப்ரம்ம நிலையை

த்வம்                                     : நீ

ப்ரவிச                                  : அடைவாயாக

விதித்வா                             : அறிந்து

 

கருத்து:

நான் சுற்றத்தாரையுடையவன், நான் பணக்காரன், இளமைபருவத்தினன் என்ற வகையில் கர்வம் கொள்ளக்கூடாது. ஒரே நிமிடத்தில் காலம் இவற்றையெல்லாம் கொள்ளைக்கொண்டுபோய்விடும்.
இந்த உலகெல்லாம் பொய்க்காட்சி, ப்ரம்மமே உண்மையானது என்று அறிந்துகொண்டு நீயே பிரம்மமாகிவிடவேண்டும் என்கிறார் ஆதிசங்கரர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*