பஜகோவிந்தம் – 18

பஜகோவிந்தம் – 18

ஞானமில்லையேல் மோக்ஷமில்லை:

குருதே கங்கா ஸாகர கமநம்
வ்ரத பரிபாலநம் அதவா தானம்|
ஜ்ஞாந விஹீந: ஸர்வ மதேந
முக்திம் ந பஜதி ஜந்ம சதேந||

பதவுரை:

குருதே – செய்கிறான்
கங்கா ஸாகர கமநம் – கங்கைக்கும், கடலுக்கும்
(ஸ்நானம்) செய்வதற்காக)
செல்வதையாவது
வ்ரத பரிபாலநம் – விரதம் ஏற்பதையாவது
அதவா – அல்லது
தானம் – தானத்தையாவது
ஜ்ஞாந விஹீந: – ஞானமில்லாதவன்
ஸர்வ மதேந – எல்லா மத ரீதியாகவும்
முக்திம் – மோக்ஷத்தை
ந பஜதி – அடைவதில்லை
ஜன்ம சதேந – நூறு பிறவிகளானாலும்

கருத்து:

கங்கைக்கும் கடலுக்கும் சென்று நீராடினாலும், விரதங்கள் பலவற்றை ஏற்றுச் செய்தாலும், தானங்கள் பல புரிந்தாலும் மோக்ஷம் கிடைக்காது. ஞானம் ஒன்றினால்தான் மோக்ஷம் கிட்டும். ஞானம் ஏற்படாமல் நூறு பிறவி எடுத்தாலும் முக்தியடைய இயலாது என்கிறார் ஆதிசங்கரர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*