திருப்பாவை – பாசுரம் 16

திருப்பாவை

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய

கோயில்காப்பானே! கொடித்தோன்றும் தோரண

வாயில்காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்;

ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;

தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;

வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ

நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!

– ஆண்டாள்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*