பஜகோவிந்தம் – 2

2. பணத்தாசையை ஒழி!

மூட ஜஹீஹி தநாகம த்ருஷ்ணாம்

குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம் |

யல்லபஸே நிஜகர்மோபாத்தம்

வித்தம் தேந விநோதய சித்தம் ||

பதவுரை:

 

ஹே மூட!                                – ஓ மூடனே!

ஜஹீஹி                                   – விட்டுவிடு

தநாகம த்ருஷ்ணாம்        – பணவரவுக்கான பேராசையை

(தன ஆகம த்ருஷ்ணாம்) – (பண வரவுக்கான தாகத்தை)

குரு                                              – செய்

ஸத்புத்திம்                              – நல்ல புத்தியை

மனஸி வித்ருஷ்ணாம்     – மனத்தில் ஆசையற்றதான

யத்                                              – எந்த

லபஸே                                      – அடைகிறாயோ

நிஜ கர்ம உபாத்தம்           – தன் முன்வினையால் வந்துசேர்ந்த

வித்தம்                                      – பணத்தை

தேந                                            – அந்த பணத்தினால்

விநோதய                                – சந்தோஷப்படுத்து

சித்தம்                                      – மனத்தை

 

கருத்து:

 

ஓ மூடனே! மேலும் மேலும் பணம் வேண்டும் என்ற பேராசையை விட்டுவிடு. நீ முன்பிறவியில் செய்த தான தருமங்களுக்கேற்ப இப்பிறவியில் உனக்குச் செல்வம் வருகிறது. அப்படி தானாக வந்த செல்வத்துடன் திருப்தியடைந்திரு. பேராசையால் மனத்தை குழப்பிக்கொள்ளாதே என்கிறார் ஆதிசங்கரர்.

பஜிப்பது தொடரும்….

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*