எண்ணங்கள் வண்ணங்கள்

எண்ணங்கள் வண்ணங்கள்

செயல்வடிவ கற்பனை:
தினமும் நாம் செய்யவேண்டியவைக் குறித்து கற்பனை செய்துகொள்ளவேண்டும்.

உதாரணமாக, பாடம் நடத்தவிருக்கும் ஆசிரியர், மாணவர்களின் மனநிலைகுறித்தும், பாடங்களை எவ்வாறு அவர்களுக்கு விளங்கவைக்கலாம் என்பது குறித்தும், ஓர் சிறு கற்பனையுடன், ஓர் மனக்காட்சியுடனேயே வகுப்பிற்கு செல்வார்.  இது எத்தொழிலானாலும் பொருந்தும்.
செயல்குறித்த அதன் போக்கு மற்றும் விளைவுகள் குறித்த எந்தவொரு கற்பனையும் இல்லாமல் எவராலும் இலக்கை எளிதில் அடைய இயலாது.

மனதில் காட்சிப்படுத்திப் பார்ப்பது, உளவியல் ரீதியாக நன்மைப்பயப்பதாக உள்ளது. இத்தகைய காட்சியமைப்பின்மூலம் அதன் ஈர்ப்பு சக்தியானது, அச்செயலிற்கான தகவல்கள், பொருட்கள், மனிதசக்தி என இவையனைத்தையும் நம்மிடம் எளிதில் கொண்டுசேர்த்துவிடும்.

ஆழ்மனத்தில் கொணர்ந்த காட்சிகள் விரைவில் செயலாக்கம் பெறும்.

எண்ணங்கள் தொடரும்…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*