எண்ணங்கள் வண்ணங்கள்
எண்ணங்கள் வண்ணங்கள் தூண்டுகோல்: ‘சுடர்விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்’, என்ற வாக்கியத்தின்படி எத்தனைத் திறைமைசாலியாக இருந்தாலும், அவர்களுக்கென ஏதேனும் ஒரு தூண்டுகோல் மிகவும் அவசியம். அத்தூண்டுகோல், நேர்மறையானதோ, எதிர்மறையானதோ எவ்வாறாயினும், அதன் துணைகொண்டே ஒவ்வொருவரும் சாதிக்கின்றனர். வாழ்வில் அனுபவித்த வேதனை, உற்றாரின் தூண்டுதல், மற்றோரின் தூண்டுதல், நம்பிய சிலரின் எதிர்மறை நடவடிக்கைகள், பேச்சுக்கள் இவற்றில் ஏதேனும் ஒரு அல்லது சில காரணங்களால் வாழ்க்கை மாறுதல் அடைகின்றது. சிறுபொறியாய் கிளம்பும் இவை […]
திருக்குறள்
திருக்குறள் குறள் – 20. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு (1-2-10) Neerin dramaiyaa dhulakenin yaaryaarkkum vaanin dramaiyaadhu ozhukku எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும். If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without […]
எண்ணங்கள் வண்ணங்கள்
எண்ணங்கள் வண்ணங்கள் மன உற்சாகமும், தளர்ச்சியும்: மனித வாழ்விற்கு ஓர் உந்து சக்தியாய் இருப்பது, மனதின் உற்சாகமாகும். மனம் சமநிலையில் இருந்தால், எவ்விதமானப் பிரச்சனைக்கும் தீர்வு எளிதில் கிடைக்கும். மனதின் உற்சாகம், நம் இயல்பை வெளிக்கொணருவதுடன், நம்மால் இயலுவனவற்றை வெளிப்படுத்துவதுடன், நமது இயலாமை எவை என்பதனையும், தெளிவாக, தாழ்வுமனப்பான்மை ஏற்படாதவாறு நமக்கு உணர்த்துகிறது. உற்சாகம் குன்றிய மனத்துடன் இருக்கையில், மிகச்சாதாரண இயலாமையும், பெரும் இழப்புபோலத் தோன்றும், நமது இயல்பை மறைத்துவிடும். […]
திருக்குறள்
திருக்குறள் குறள் – 19. தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்(1-2-9) Thaanam thavamirandum thangaa viyanulakam vaanam vazhangaa dhenin மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும். If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world
எண்ணங்கள் வண்ணங்கள்
எண்ணங்கள் வண்ணங்கள் பயமும் அச்சமும்: வாழ்க்கையில் பயம் இருக்கலாம், ஆனால் பயமே வாழ்வாகக்கூடாது. ஒவ்வொன்றிற்கும் பயப்படவோ, அச்சமடையவோ ஆரம்பித்தால், எதனையும் சரியாகச் செய்யமுடியாது. தொடங்கிய நிலையிலேயே அது முடிவடைந்துவிடும். செயலைத் தொடங்கும்போதோ அல்லது இடையிலோ ஏற்படும் தயக்கம் வேறு, அச்சமயம் தோன்றும் பயம் என்பது வேறு. தயக்கம் என்பது செயலின் போக்குக்கேற்ப தானே நீங்கிவிடும். ஆனால் செயல் குறித்த பயம், செயலிற்கான உற்சாகத்தைக்குறைத்துவிடும். நாம்தான் இவற்றை முயற்சியெடுத்து நீக்கிக்கொள்ளவேண்டும். தவிர்க்கமுடியாமல் […]
எண்ணங்கள் வண்ணங்கள்
எண்ணங்கள் வண்ணங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனம்: விமர்சனம் என்பது செயலை கருத்தில்கொள்ளாமல், செய்தவரை கருத்தில் கொள்வதாய் இருந்தால், அது சரியான விமர்சனமாய் அமையாது. நமக்கு பிடித்தவராய் இருந்தால் அதற்கேற்பவும், பிடிக்காதவராயினின் அதற்கேற்றாற்போலவும், நமது விமர்சனங்கள் அமையும். எனவேதான் செயல்களை சீர்தூக்கி விமர்சனம் செய்யவேண்டும். ஆக்கப்பூர்வமான விமர்சனத்திற்கு, முதலில் அவரது செயல்கள் குறித்து சரியாக அறிந்துகொண்டு, நோக்கத்தை தெரிந்துகொண்டு, பின்பே அவற்றைக்குறித்து பேசவேண்டும். ஏதேனும் தவறு இருப்பின், ‘இது தவறு’, ‘இவ்வாறு செய்யாதே’, […]
திருக்குறள்
திருக்குறள் குறள் – 18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு (1-2-8) Sirappotu posanai sellaadhu vaanam varakkumel vaanorkkum eendu மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது. If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the […]