எண்ணங்கள் வண்ணங்கள்

29/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் ஆழ்மன ஆற்றல்: இறைவன் படைத்த அற்புதபடைப்புக்களில் ஒன்றான மனிதரின் ஆற்றலில், ஆழ்மன ஆற்றல் என்பது மிகவும் சக்திவாய்ந்ததாகும். ஆழ்மனத்தில் பதிந்த எந்தவொரு பதிவும், காலத்திற்கும் அழிவதில்லை. பத்துவயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு, அவ்வயதிற்குள், அவர்தம் மனதில் பதியும் எண்ணங்கள் அனைத்தும், அவர்களை ஏதேனும் ஒர் விதத்தில் தொடர்ந்துவரும். அவ்வயதிற்குள் அமையும் சூழலும், ஏற்படும் பழக்கமும், கற்றுக்கொள்பவைகளும், தெரிந்துக்கொள்பவைகளுமே என்றென்றிற்கும் இருக்கும், அவர்களது அடிப்படைத் தன்மைகளாய் அமையும். வெளியில் பெரும் […]

கொன்றை வேந்தன்

29/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 10. ஒருவனைப் பற்றி ஓரகத் திரு. பெண்ணானவள், நல்ல ஆண் ஒருவனைத் தேர்ந்தெடுத்து, அவனுடன் ஓரே வீட்டில் இன்பமாய் வாழவேண்டும். 11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம். வேதங்களை நன்கு ஓதுவதே, அந்தணர்களுக்கு மிகச்சிறந்த ஒழுக்கமாகும்.

திருக்குறள்

28/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 26. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் (1-3-6) Seyarkariya Seyvaar Periyar Siriyar Seyarkariya Seykalaa Thaar செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர். The great will do those things which is difficult to be done; but the mean cannot do them

எண்ணங்கள் வண்ணங்கள்

28/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் இச்சையும் அனிச்சையும்: பெரும்பாலன செயல்கள் இச்சையின் காரணமாகவே நிகழ்கின்றன. உதாரணமாக சாப்பிடுவது, விதவிதமாய் உடுத்துவது, வெளியில் எங்காவது செல்வது, படிப்பது, எழுதுவது, ஏதேனும் செயல்புரிவது, உறங்குவது, போன்ற பல செயல்கள் நமது விருப்பத்தால் நடைபெறுவதாகும். எனினும், செயல்புரிந்து ஏற்பட்ட பழக்கம் காரணமாக, இவற்றில் பல வெகுவிரைவில் அனிச்சை செயல்களாகின்றன. அதாவது நம் புத்தியின் கட்டளை இல்லாமலேயே நடைபெறுகின்றன. முதலில் நாமாக சாப்பிடும் போது, என்ன உணவு உள்ளதோ […]

கொன்றை வேந்தன்

28/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 8. ஏவா மக்கள் மூவா மருந்து. பெற்றோர் குறிப்பறிந்து செயல்படும் மக்கள் பிணிதீர்க்கும் மருந்தைப் போன்றவர்கள். 9. ஐயம் புகினும் செய்வன செய். பிச்சை எடுத்து வாழவேண்டிய நிலை ஏற்படினும், நற்செயல்களைச் செய்யவேண்டும்.

எண்ணங்கள் வண்ணங்கள்

27/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் திடமுடிவும், விடாமுயற்சியும்: எதை செய்யவேண்டும், எதற்காக செய்யவேண்டும், எவ்வாறு செய்யவேண்டும் என்ற தெளிவுடன் செயல்களை ஆரம்பிக்கவேண்டும். நமது செயல்கள் பற்றிய எண்ணங்களும் அதற்கான தீர்கமான முடிவும், நமதாக இருக்கும் பட்சத்தில், எவ்வித இடையூறுகள் ஏற்பட்டாலும், அவற்றை சரிசெய்ய நம்மால் இயலும். எண்ணியமுடிதல் வேண்டும், நல்லன எண்ணவேண்டும், என்பதுடன், திண்ணிய நெஞ்சமும் வேண்டும். தீர்கமான முடிவுடன், செயலைத்தொடங்கி, விடாமுயற்சியுடன் செயல்பட்டால் செயல்கள் தாமதமாகமல் விரைவில் நிறைவுறும். எண்ணங்கள் தொடரும்…

கொன்றை வேந்தன்

27/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும். ஊர்மக்கள் அனைவருடனும் விரோதம் கொண்டால், வம்சத்தின் அனைவரும் கெட்டொழிய நேரும். 7. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எண்களை அடிப்படையாகக்கொண்ட கணிதமும், எழுத்துக்களை அடிப்படையாகக்கொண்ட அறநூல்களும் கண்களுக்கிணையான முக்கியத்துவம் வாய்ந்தவை.

திருக்குறள்

27/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 25. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி (1-3-5) ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவார். Aindhaviththaan aatral akalvisumpu laarkomaan indhirane saalung kari Indra, the king of the inhabitants of the spacious heaven, is himself, a sufficient proof of the strength of him […]

எண்ணங்கள் வண்ணங்கள்

26/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் சொல்வதும் செய்வதும்: குறிக்கோள் குறித்த எண்ணங்கள் எப்பொழுதும் நம்மைவிட்டு நீங்காமல் இருக்க சில பழக்கங்களை மேற்கொள்ளவேண்டும். முதலில் எடுத்த செயலை என்னால் செய்யமுடியும் என்று உள்ளத்திலும் வெளியிலும் திரும்பத்திரும்ப சொல்லிக்கொள்ளவேண்டும். எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் மிகுந்த சக்தி உண்டு. அதன்படி, நாம் நமக்கு வேண்டியவற்றை மீண்டும் மீண்டும் உரைப்பதனால் அவை நமதாகிவிடும். நமது செயல்களை மேம்படுத்த உதவும். மேலும் அச்செயலகள் குறித்து செய்துபார்த்தல் (கற்பனையாக) செயல்களின் முழுமையை உணரவைக்கும். […]

திருக்குறள்

26/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 24. உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து (1-3-4) Uranennum thottiyaan oraindhum kaappaan varanennum vaippirkor viththu அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன் He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of […]

1 23 24 25 26 27 33