பஞ்ச பூதத்தலங்கள்

01/11/2016 Sujatha Kameswaran 0

பஞ்ச பூதத்தலங்கள் மண்/நிலம் (ப்ருத்வி), நீர் (அப்பு), நெருப்பு (தேயு), காற்று (வாயு), ஆகாயம் (ஆகாஷம்) ஆகிய ஐம்பூதங்களிலும் பரந்து விளங்குவதே சிவலிங்கம் ஆகும். இதனை அனைவருக்கும் உணர்த்தும் பொருட்டு இவ்வைம்பெரும் பூதங்களின் அடிப்படையில் ஐந்து தலங்களை அமைத்தனர் நம் முன்னோர்கள். காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் (மண்), திருவானைக்காவல் (நீர்), திருவண்ணாமலை (நெருப்பு), காளஹஸ்தி (காற்று), சிதம்பரம் (ஆகாயம்) என தமிழகத்தின் வடப்பகுதியில் அமைந்துள்ள ஆலயங்களாகும். இவைப்போன்றே பாண்டியநாட்டின் தென்பகுதியிலும் பஞ்சபூதத்தலங்கள் […]

விடுகதையா இந்த வாழ்க்கை? இளம்பருவம்

20/10/2016 Sujatha Kameswaran 0

இளம் பருவம் வாழ்க்கைச் சக்கரத்தின் ஒவ்வொரு நிலையும், அழகானது, இனிமையானது மற்றும் வியப்பானது. இவற்றில் இளம்பருவம் என்பது மிகவும் வியப்பானது, சிலநேரங்களில் அபாயகரமானதும், மொத்தத்தில் அவ்விளம்பிராயத்தினருக்கும் அவர்களைச் சுற்றியுள்ளோருக்கும் பெரும் சவாலான பருவம் அது. இப்பருவத்தில் உள்ளோரை அவரைச்சார்ந்தோர் புரிந்துகொண்டு, அனுசரித்து, அரவணைத்துச் சென்றால் இந்நிலையை இனிதே கடக்கலாம். மற்றவர்கள் நம்மைப்புரிந்து கொள்ளவில்லை என்ற எண்ணம் இளம்பருவத்தினரிடம் ஓங்கி நிற்கிறது. இவ்வயதினரின் கருத்துக்களை முதலில் கேட்டு பின்பு அதில் உள்ள […]

விடுகதையா இந்த வாழ்க்கை? – குழந்தைகள்

10/10/2016 Sujatha Kameswaran 0

குழந்தைகள்-(தொடர்ச்சி) குழந்தைகள் காணும் உலகம், மிகவும் அதிசயமானது. அவர்கள் ஒவ்வொன்றையும் கண்டு பிரமிக்கின்றனர். அவ்வுணர்வை உடனே வெளிப்படுத்தத் துடிக்கின்றனர். அத்தகு உணர்வுகளினூடே பல்வேறு கேள்விகளை முன்வைக்கின்றனர். அவற்றிற்கெல்லாம் தக்க பதிலாக உண்மையான பதிலாக, எவ்வித சமாளிப்பும் இல்லாத பதிலாக பெற்றோரின்/பெரியோரின் பதில் இருக்கவேண்டும். அக்கேள்விகளை தொணதொணப்பென்று நாம் நினைத்தால், பிற்காலத்தில் நம் கேள்விகளை அவர்கள்  முணுமுணுப்பென்பர். ஏன், எதற்கு என்கிற கேள்விகள் பல கொண்டுள்ளவர்களே குழந்தைகள். முற்காலத்தில் தவழும் பிராயத்தில் […]

விடுகதையா இந்த வாழ்க்கை?

01/09/2016 Sujatha Kameswaran 0

விடுகதையா இந்த வாழ்க்கை? குழந்தைகள் குழந்தைகளின் உலகம் மிக அருமையானது. தன்னைச்சுற்றி நடக்கும் சூஷ்மங்களை அறிந்துகொள்ள முடியாத பருவம். நம்பிக்கையையும், அன்பையும் ஆணிவேராய் கொண்ட பருவம். குரோதம் இல்லை, பகைமை இல்லை, வெறுப்பில்லை, கோபமும் இல்லை. தன்னால் இயன்றவற்றிற்கெல்லாம் சிரிப்பதும், இயலாமையின்போது அழுவதும், இயல்பாய் கொண்டுள்ளன குழந்தைகள். தொடர்ந்து முயலும் முயற்சி, கடுஞ்சொற்பேசியவரிடமும், நிரந்தர கோபம் கொள்ளாமை. தான் அண்டியவரை நம்புவது, தன்னை சேர்ந்தவரை மகிழ்விப்பது என எவ்வித பொருட்பலனையும் […]

விடுகதையா இந்த வாழ்க்கை?

11/08/2016 Sujatha Kameswaran 2

விடுகதையா இந்த வாழ்க்கை?!   ஏன்? எதற்கு? என்கிற கேள்விகளைக்கொண்டும், ஆனால் அவற்றிற்கு பதில்கள் சரியானபடி இல்லாமல் அமைந்திருக்கின்றது இவ்வாழ்க்கை. விடைக்காணமுடியா விசித்திரமான புதிர், இந்த வாழ்க்கை. மற்றவருக்கு நடக்கும் ஒவ்வொரு விஷயங்களுக்கும், அடுத்தடுத்து என்ன செய்யவேண்டும் என்றும், நடந்து முடிந்த நிகழ்ச்சியானால் அதனை எவ்வாறு சிறப்பாகச் செய்திருக்காலாமென்றும் நமக்கு சரியாகத் தெரிகின்றது. ஆனால், அவை நமக்கு என வரும்போது, தக்க சமயத்தில்,  நம் புத்தி, உணர்ச்சி இவைகள் தக்கவாறு […]

கொன்றை வேந்தன்

08/06/2016 Sujatha Kameswaran 2

கொன்றை வேந்தன் 90. ஒத்த இடத்து நித்திரை செய். மேடு பள்ளம் ஏதும் இல்லாத சமதள இடத்தில் உறங்கவேண்டும். 91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம். அறம் கூறும் நூல்களைப் படித்தறியாதவர்களிடம் நல்ல சிந்தனை, ஒழுக்கமான செயல்கள் இருக்காது.

கொன்றை வேந்தன்

07/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 88. வேந்தன் சீறின் ஆந்துணை இல்லை. ஒருவர் மீது அரசன் கோபம் கொண்டாராகின், அவரை அவ்வரசனிடமிருந்து காப்பாற்ற யாரும் துணைப் புரியமாட்டார். 89. வைகல்தோறும் தெய்வம் தொழு. தினமும் இறைவனை வணங்கவேண்டும்.

கொன்றை வேந்தன்

06/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு. மனம் சற்றும் தளராத ஊக்கமே, செல்வத்தை வளரச்செய்யும். 87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தனை. தூய மனம் உடையவரிடம் வஞ்சக எண்ணம் இராது.

கொன்றை வேந்தன்

05/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும். வீரனுடனான நட்பானது, நம் கையில் கூரான அம்பு இருப்பதற்குச் சமம். 85. உரவோர் என்கை இரவாது இருத்தல். மன உறுதி என்பது, பிறரிடம் சென்று எதையும் யாசிக்காமல் இருப்பதாகும்.

கொன்றை வேந்தன்

04/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும். மழைப் பொழிவது குறைந்து போனால், நாட்டு வளம் குறையும் காரணத்தால், மக்களிடம் கொடைக்குணமும் குறைந்துவிடும். 83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம். விருந்தினர்களை உபசரிக்காதவர்களிடம் இல்லறத்தின் நற்பண்புகள் இருக்காது.

1 16 17 18 19 20 32