ஒளவையாரின் இலக்கிய ஞானம்

30/08/2020 Sujatha Kameswaran 0

ஒளவையார் இறைவனின் அருளால், இலக்கிய ஞானமும், உலக அறிவில் மேம்பட்ட எண்ணமும் உடையவராய் திகழ்ந்தார். உலக வாழ்க்கை முறைப்பற்றியும், அதிலிருந்து மேம்பட்ட நிலையை அடைவதற்கான வழிகளையும் தம் இலக்கிய ஞானத்தின் துணைக்கொண்டு அனைவருக்கும் தெளிவுபடுத்தினார். அவற்றுள் ஒரு பகுதி: அரியது: அரிது அரிது மானிடர் ஆதல் அரிது;மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடுபேடு நீங்கிப் பிறத்தல் அரிது.பேடு நீங்கிப் பிறந்த காலையும்ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;ஞானமும் கல்வியும் நயந்த காலையும்தானமும் […]

பரதநாட்டியம்

03/04/2018 Sujatha Kameswaran 0

இசைத்துறை சார்ந்த கலைகளில் ஓர் அற்புதமான கலை நமது பரதநாட்டியம். மற்ற அனைத்து இசை சார்ந்த கலைகளிலும், சில உறுப்புகளின் ஒத்துழைப்பு இருந்தாலே போதுமானது. ஆனால் பரதநாட்டியத்தில் வெளிஉறுப்புகள் மட்டுமல்லாது, எண்ணமும் ஒரே சித்தமாய் ஒரே பாதையில் அமையவேண்டும். பாட்டின் தன்மைக்கேற்ப முகம் சிறந்த உணர்ச்சிகளையும், கைகள் மற்றும் கால்கள் பாடலுக்கேற்ற அபிநயத்தையும், காட்டவேண்டுமானால் எண்ணமும் அப்பாட்டிற்கேற்பவே பயணிக்கவேண்டும். இவ்வாறு அனைத்தையும் ஒருங்கிணைத்து செய்தாலே இக்கலை பரிபூரணமாகும். சரியாக சொல்வதானால் […]

கண் தானம்

08/02/2017 Sujatha Kameswaran 0

கண் தானம் உடலுறுப்புகளின் தானம் பற்றி எண்ணற்ற செய்திகள் பரவிவருகின்றன. மேலும் அதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடந்தவண்ணம் உள்ளன. இவை எல்லாம் மனிதாபிமானத்திற்காகவும், சில புண்ணியத்திற்காகவும், சில பணத்திற்காகவும், மேலும் சில மண்ணிற்கோ, நெருப்பிற்கோ போவது சக உயிரினத்திற்கு பயன்பட்டால் நல்லதுதான் என தத்துவ ரீதியாகவோ செய்யப்படுகின்றன. ஆனால் பக்தியினால் தூய தொண்டுள்ளத்தால் முதன்முதலில் உறுப்பு தானம் பக்தி இலக்கிய காலத்தில்  நடைபெற்றது. உடலுறுப்பு தானம் அதிலும் […]

கொன்றை வேந்தன்

08/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 28. சிவத்தைப் பேணின் தவத்திற்கு அழகு. அனைத்தும் சிவமயம் என்றுக் கருதிப் போற்றுவதே, தவம் செய்பவர்க்கு மேன்மையாகும். 29. சீரைத் தேடின் ஏரைத் தேடு. சிறந்த வாழ்க்கை வேண்டுமெனில், உழவுத்தொழிலைச் செய்து வாழவேண்டும்.

கொன்றை வேந்தன்

24/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் நாமே. கொன்றை மலர்களைச் சூடிய சிவபெருமானின் புதல்வனாகிய விநாயகப் பெருமானின் திருவடியை நாம் எப்போதும் போற்றி வணங்குவோம். 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் நம்மைப் பெற்ற தாயும் தந்தையும் நாம் முதலில் அறிந்துகொண்டு வணங்கவேண்டிய தெய்வங்கள் ஆவர்.

1 2