கவனம்

07/10/2025 Sujatha Kameswaran 0

அனைத்திலும் கவனம் தேவை. படிப்பில் கவனம் தேவை. நடத்தையில் கவனம் தேவை. பேச்சில் கவனம் தேவை. செயல்களில் கவனம் தேவை. எழுத்தில் கவனம் தேவை. செய்கையில் கவனம் தேவை. இருப்பில் கவனம் தேவை. சேர்க்கையில் / சகவாசத்தில் கவனம் தேவை. மனிதர்களுடனான சேர்க்கையிலும், பொருட்களைச் சேர்ப்பதிலும் கவனம் தேவை. இவை அனைத்திற்கும் மேலாக எண்ணங்களில் கவனம் தேவை. ஏனெனில் எண்ணங்களே அனைத்தையும் வழிநடத்துகின்றன. எண்ணங்களே அனைத்திற்கும் ஆதாரமாக உள்ளன. எண்ணம் […]

இயற்கை

25/08/2025 Sujatha Kameswaran 0

எண்ணிறைந்தத் தத்துவங்களைக்கொண்டதாக இயற்கையை இறைவன் அமைத்துள்ளார். குடும்ப அமைப்பு, உணவு முறை, பழக்கவழக்கங்கள் யாவற்றையும் ஓர் நேர்த்தியுடன், அடிப்படை இயல்புப்படி அமைத்துள்ளார். இயற்கையின் சூழலுக்கேற்ப, அச்சூழலைச்சார்ந்த உயிரினங்களையும் படைத்துள்ளார். உதாரணமாக, பனிப்பிரதேசங்களுக்கு ஏற்றார்போல உடலமைப்புடன் உயிரினங்களை உருவாக்கியுள்ளார். மனிதர்களுக்கு, உடலமைப்பு, வீடு, வேலைவாய்ப்பு என தினசரி செயல்களுக்கு ஏற்றார்போலவும், மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், பனிக்கரடிகள், மாடுகள், ஆடுகள் போன்ற மிருகங்களுக்கு, அப்பனிப்பிரதேசத்தின் குளிரைத் தாங்கிக்கொள்ளும் வண்ணம் உடலமைப்பையும், உணவுமுறைகளையும் அளித்துள்ளார். மேலும், […]

நா-காக்க

01/05/2025 Sujatha Kameswaran 0

‘யாகாவராயினும் நாகாக்க’, என்றார் திருவள்ளுவர். இது இருவகையில் பிரித்துப்பார்க்கையில் இரண்டுமே மேன்மை தருவதாய் அமைந்துள்ளதை அறியலாம். தேவையற்ற பொல்லாதவைகளை ஏதும் பேசாமல் இருக்கவேண்டும். இதனால் பல நெருக்கடிகளையும், சண்டைகளையும், வம்புகளையும், உறவு விரிசல்களையும் தவிர்க்கலாம். மேலும் தேவையானவற்றை மட்டும் பேசுவதால் நேர மேலாண்மை, ஆற்றல்(energy) மேலாண்மை, செயல்திறன் ஆகியவை மேன்படும். உணவு கட்டுப்பாட்டிற்காக நாக்கைக் காத்தால் அடிக்கடி நோய் ஏற்படாமலும், வைத்தியசெலவுகளை எதிர்கொள்ளாமலும் தவிர்க்கலாம். மேலும் ஆரோக்கயம் மேம்படுவதோடு, மருத்துவசெலவுகளை […]

வாழ்க்கைக் காலம்

22/11/2022 Sujatha Kameswaran 0

வாழ்க்கையில் அனைவரும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் ஒரே மாதிரியாக பெற்றுள்ளோம். அதுவே காலம். அனைவருக்கும் 24 மணி நேரம் என்பது பொதுவானதாக உள்ளது. இந்த காலத்திற்குள் நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதனைப் பொறுத்தே நம் வாழ்வு அமைகிறது. இந்த கால அளவிற்குள் நமது சக்தியை & புத்தியை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைக் கொண்டே நம் வாழ்வின் நிலை அமையும். நம் அனைவரிடமும் இருக்கும் சில பல ஏற்றத்தாழ்வுகள் இவற்றைக்கொண்டே […]

பஜகோவிந்தம் – 30

16/05/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 30 மனதைக் கட்டுப்படுத்தவேண்டும்: ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்நித்யாநித்ய விவேக விசாரம் |ஜாப்ய ஸமேத ஸமாதி விதாநம்குர்வவதாநம் மஹதவதாநம் || பதவுரை: ப்ராணாயாமம்                                   – மூச்சுப்பயிற்சிப்ரத்யாஹாரம்                                […]

பஜகோவிந்தம் – 22

02/05/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 22 இறத்தல் பிறத்தல் அற்ற முக்தி நிலை: புநரபி ஜனனம் புநரபி மரணம் புநரபி ஜனனீ ஜடரே சயனம் | இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே க்ருபயாऽபாரே பாஹி முராரே || பதவுரை: புநரபி – மறுபடியும் ஜனனம் – பிறப்பு புநரபி – மறுபடியும் மரணம் – இறப்பு புநரபி – மறுபடியும் ஜனனீ ஜடரே – தாயின் வயிற்றில் சயனம் – படுக்கை (தங்குதல்) […]

பஜ கோவிந்தம் – 11

25/10/2020 Sujatha Kameswaran 0

13. காலத்தின் மாறுதல்   தினயாமின்யௌ ஸாயம் ப்ராத: சிசிரவஸந்தௌ புனராயாத:  | கால: க்ரீடதி கச்சத்யாயு: ததபி ந முஞ்சத்யாசாவாயு:  ||   பதவுரை: தினயாமின்யௌ                     –  பகலும் இரவும் ஸாயம்                                    […]

பஜகோவிந்தம் – 9

11/04/2020 Sujatha Kameswaran 0

9. நாம் யார் என்பதை கவனிக்கவேண்டும்   கா தே காந்தா கஸ்தே புத்ர: ஸம்ஸாரோ‍‍ऽயம் அதீவ விசித்ர:  | கஸ்ய த்வம் வா குத ஆயாத: தத்வம் சிந்தய ததிதம் ப்ராந்த  ||   பதவுரை  : கா                                     – யார்? தே    […]

விடுகதையா இந்த வாழ்க்கை?

01/09/2016 Sujatha Kameswaran 0

விடுகதையா இந்த வாழ்க்கை? குழந்தைகள் குழந்தைகளின் உலகம் மிக அருமையானது. தன்னைச்சுற்றி நடக்கும் சூஷ்மங்களை அறிந்துகொள்ள முடியாத பருவம். நம்பிக்கையையும், அன்பையும் ஆணிவேராய் கொண்ட பருவம். குரோதம் இல்லை, பகைமை இல்லை, வெறுப்பில்லை, கோபமும் இல்லை. தன்னால் இயன்றவற்றிற்கெல்லாம் சிரிப்பதும், இயலாமையின்போது அழுவதும், இயல்பாய் கொண்டுள்ளன குழந்தைகள். தொடர்ந்து முயலும் முயற்சி, கடுஞ்சொற்பேசியவரிடமும், நிரந்தர கோபம் கொள்ளாமை. தான் அண்டியவரை நம்புவது, தன்னை சேர்ந்தவரை மகிழ்விப்பது என எவ்வித பொருட்பலனையும் […]

விடுகதையா இந்த வாழ்க்கை?

11/08/2016 Sujatha Kameswaran 2

விடுகதையா இந்த வாழ்க்கை?!   ஏன்? எதற்கு? என்கிற கேள்விகளைக்கொண்டும், ஆனால் அவற்றிற்கு பதில்கள் சரியானபடி இல்லாமல் அமைந்திருக்கின்றது இவ்வாழ்க்கை. விடைக்காணமுடியா விசித்திரமான புதிர், இந்த வாழ்க்கை. மற்றவருக்கு நடக்கும் ஒவ்வொரு விஷயங்களுக்கும், அடுத்தடுத்து என்ன செய்யவேண்டும் என்றும், நடந்து முடிந்த நிகழ்ச்சியானால் அதனை எவ்வாறு சிறப்பாகச் செய்திருக்காலாமென்றும் நமக்கு சரியாகத் தெரிகின்றது. ஆனால், அவை நமக்கு என வரும்போது, தக்க சமயத்தில்,  நம் புத்தி, உணர்ச்சி இவைகள் தக்கவாறு […]

1 2