சரஸ்வதி பூஜை

02/10/2025 Sujatha Kameswaran 0

சாரதா நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கையைக் குறித்து பூஜிக்கவும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மியைக் குறித்து பூஜிக்கவும், அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியைக் குறித்து பூஜிக்கவும் வேண்டும். சரஸ்வதி பூஜையன்று நமது படிப்பு மற்றும் வேலைக்குப் பயன்படுத்தும் புத்தகங்கள், கருவிகள் ஆகியவற்றை சரஸ்வதி பிம்பத்திற்கு முன்போ, நமது வீட்டில் அல்லது அலுவலகத்தில் அமைந்துள்ள பூஜைக்கான இடத்தில் வைத்து பூஜித்து, மறுநாளான விஜயதசமியன்று மறுபடியும் பூஜித்து முதல் நாள் நாம் […]

எண்ணங்கள் வண்ணங்கள்

07/04/2016 Sujatha Kameswaran 0

நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைபடவேண்டும். -மகாகவி பாரதியார் எண்ணங்கள் வண்ணங்கள் எதிர்பார்ப்பு : நம்பிக்கையைப்போல எதிர்ப்பார்பும் நம் எண்ணத்தைப்போல் அமையும். நேர்மைமறை எண்ணத்துடன் எதிர்பார்பது நன்மை செய்யும். எடுத்தக்காரியத்தில் வெற்றிபெறவேண்டும் என்பதும், எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதும், தான் விரும்பியதை அடையவேண்டும் என்பதும் அனைவரின் எதிர்பார்பாக உள்ளது. இவ்வெதிர்பார்ப்பை, நடைமுறையில் சில விதங்களில் பிரிக்கலாம். பெற்றோர்களின் எதிர்பார்ப்பு, நம்மிடம் நாம் கொண்டுள்ள எதிர்பார்ப்பு, ஆசிரியர் மற்றும் அலுவலக […]

எண்ணங்கள் வண்ணங்கள்

06/04/2016 Sujatha Kameswaran 0

உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும். -மகாகவி பாரதியார் எண்ணங்கள் வண்ணங்கள் நம்பிக்கை: உலக மக்கள் நிம்மதியுடன் வாழ ஆதாரம் நம்பிக்கை. நம்மேல் நாம் வைக்கும் நம்பிக்கை, நம்மை உயர்த்தும். பிறர்மேல் நாம் வைக்கும் நம்பிகை நம் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் மேம்படுத்தும், பிறர் நம் மேல் வைக்கும் நம்பிக்கை நம்மை மேலும் முன்னேற்றுவதுடன், அவர்களுடனான உறவுமுறையை மேலும் சிறப்பானதாக மாற்றும். பொதுவாக நாம் எதைப்பார்க்கிறோமோ, அதை நம்புவதில்லை. எதை நம்புகிறோமோ, […]

எண்ணங்கள் வண்ணங்கள்

03/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணையும் எழுத்தையும் மூலமாகக் கொண்டு எண்ணியவற்றை வெளிப்படுத்த மொழிகள் பல அமைத்து எண்ணற்ற ஊர்களை இதனடிப்படையில் பிரித்தாலும் எண்ணிலடங்கா மக்கள் அவற்றில் வாழ்ந்தாலும் – அவர்தம் எண்ணங்கள் எல்லாம் சகமனிதர் என்பதில் இணைவதே ‘மனிதம்’.   எண்ணங்கள் வண்ணங்கள் எண்ணங்கள் என்பது நமது உள்ளக்கருத்தையும், வண்ணங்கள் என்பது அவற்றைச்சுற்றி அமையும் நம் வாழ்க்கைமுறையையும் உணர்த்தும். எண்ணங்களில் பலபரிமாணங்கள்: நாம் ஒன்றைப்பற்றி எண்ணும்போது, அது பிரிதொரு காரணத்தினால் மற்றொன்றைப் பற்றி எண்ணத்தூண்டுகிறது. […]