கவனம்

07/10/2025 Sujatha Kameswaran 0

அனைத்திலும் கவனம் தேவை. படிப்பில் கவனம் தேவை. நடத்தையில் கவனம் தேவை. பேச்சில் கவனம் தேவை. செயல்களில் கவனம் தேவை. எழுத்தில் கவனம் தேவை. செய்கையில் கவனம் தேவை. இருப்பில் கவனம் தேவை. சேர்க்கையில் / சகவாசத்தில் கவனம் தேவை. மனிதர்களுடனான சேர்க்கையிலும், பொருட்களைச் சேர்ப்பதிலும் கவனம் தேவை. இவை அனைத்திற்கும் மேலாக எண்ணங்களில் கவனம் தேவை. ஏனெனில் எண்ணங்களே அனைத்தையும் வழிநடத்துகின்றன. எண்ணங்களே அனைத்திற்கும் ஆதாரமாக உள்ளன. எண்ணம் […]

சரஸ்வதி பூஜை

02/10/2025 Sujatha Kameswaran 0

சாரதா நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கையைக் குறித்து பூஜிக்கவும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மியைக் குறித்து பூஜிக்கவும், அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியைக் குறித்து பூஜிக்கவும் வேண்டும். சரஸ்வதி பூஜையன்று நமது படிப்பு மற்றும் வேலைக்குப் பயன்படுத்தும் புத்தகங்கள், கருவிகள் ஆகியவற்றை சரஸ்வதி பிம்பத்திற்கு முன்போ, நமது வீட்டில் அல்லது அலுவலகத்தில் அமைந்துள்ள பூஜைக்கான இடத்தில் வைத்து பூஜித்து, மறுநாளான விஜயதசமியன்று மறுபடியும் பூஜித்து முதல் நாள் நாம் […]

இயற்கை

25/08/2025 Sujatha Kameswaran 0

எண்ணிறைந்தத் தத்துவங்களைக்கொண்டதாக இயற்கையை இறைவன் அமைத்துள்ளார். குடும்ப அமைப்பு, உணவு முறை, பழக்கவழக்கங்கள் யாவற்றையும் ஓர் நேர்த்தியுடன், அடிப்படை இயல்புப்படி அமைத்துள்ளார். இயற்கையின் சூழலுக்கேற்ப, அச்சூழலைச்சார்ந்த உயிரினங்களையும் படைத்துள்ளார். உதாரணமாக, பனிப்பிரதேசங்களுக்கு ஏற்றார்போல உடலமைப்புடன் உயிரினங்களை உருவாக்கியுள்ளார். மனிதர்களுக்கு, உடலமைப்பு, வீடு, வேலைவாய்ப்பு என தினசரி செயல்களுக்கு ஏற்றார்போலவும், மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், பனிக்கரடிகள், மாடுகள், ஆடுகள் போன்ற மிருகங்களுக்கு, அப்பனிப்பிரதேசத்தின் குளிரைத் தாங்கிக்கொள்ளும் வண்ணம் உடலமைப்பையும், உணவுமுறைகளையும் அளித்துள்ளார். மேலும், […]

நா-காக்க

01/05/2025 Sujatha Kameswaran 0

‘யாகாவராயினும் நாகாக்க’, என்றார் திருவள்ளுவர். இது இருவகையில் பிரித்துப்பார்க்கையில் இரண்டுமே மேன்மை தருவதாய் அமைந்துள்ளதை அறியலாம். தேவையற்ற பொல்லாதவைகளை ஏதும் பேசாமல் இருக்கவேண்டும். இதனால் பல நெருக்கடிகளையும், சண்டைகளையும், வம்புகளையும், உறவு விரிசல்களையும் தவிர்க்கலாம். மேலும் தேவையானவற்றை மட்டும் பேசுவதால் நேர மேலாண்மை, ஆற்றல்(energy) மேலாண்மை, செயல்திறன் ஆகியவை மேன்படும். உணவு கட்டுப்பாட்டிற்காக நாக்கைக் காத்தால் அடிக்கடி நோய் ஏற்படாமலும், வைத்தியசெலவுகளை எதிர்கொள்ளாமலும் தவிர்க்கலாம். மேலும் ஆரோக்கயம் மேம்படுவதோடு, மருத்துவசெலவுகளை […]

பெரியபுராணத்தில் ‘வண்ணம்’

06/04/2025 Sujatha Kameswaran 0

பெரியபுராணத்தில் வண்ணங்கள் சேக்கிழார் பெருமான் இறையருளால் இயற்றிய பெரியபுராணம் என்றழைக்கப்படும் திருத்தொண்டர் புராணம், செயற்கரிய செயல்களை பக்தி மற்றும் தொண்டு என்கிற நோக்கில் செய்த நாயன்மார்களின் வாழ்வியலைப்பற்றி உரைக்கும் உன்னத நூலாகும். பெரியபுராணத்தில், இலக்கண இலக்கிய நயம், படிப்போரையும் கேட்போரையும் சிந்திக்கவும் நல்வழிப்படுத்தவும் வைக்கும் நல்கருத்துக்கள் மற்றும் வாழ்வு சீராக்கிக்கொள்ளத் தேவையான அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகியவற்றைப்பற்றி நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு மூலம் உணர்த்தி வழிநடத்துவது போன்ற சிறப்புகள் […]

காலச்சக்கரம்

13/04/2024 Sujatha Kameswaran 0

காலச்சக்கரம் காலமாற்றத்தைக் குறிக்கும் சொல் காலச்சக்கரம். இது காலம்-நேரம் மாறுவதைக் குறிப்பிடுவதோடு, அச்சுழற்சியியுடன் மானிடர்களும் எங்ஙனம் மாறுகின்றனர் என்பதை குறிக்கின்றது. இருபது வயதில் இதுதான் வேண்டும் என்று தோன்றும் முப்பது வயதில் இவைகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும் நாற்பது வயதில் இதுவே போதும் என்று தோன்றும் ஐம்பது வயதில் இவைகள் இல்லையென்றாலும் பரவாயில்லை எனத் தோன்றும் அறுபது வயதில் எது இல்லையென்றாலும் பரவாயில்லை என்று தோன்றும் எழுபது […]

ஒரு வரியில் சில தெய்வங்கள்

21/05/2021 Sujatha Kameswaran 0

  ஒரு வரியில் சில தெய்வங்கள்:- ” சிரமாறு உடையான் “ 1. சிரம் மாறு உடையான் – தலையது மாறிவேழத்தின் சிரம் அமைந்த விநாயகனைக்குறிக்கும் 2 . சிரம் ஆறு(6)உடையான் – ஆறு முகம்படைத்த சுப்பிரமணியத்தைக்குறிக்கும் 3 . சிரம் ஆறு உடையான் – சிரத்தில் கங்கையை கொண்ட சிவனைக்குறிக்கும் 4 . சிரம் மாறு உடையான் – சிரமது முன்னும் பின்னும் உள்ள நான் முகனாம் பிரம்மாவைக்குறிக்கும் […]

கற்றல் கற்பித்தலில் நவீன தொழில் நுட்பங்களின் பங்கு

12/09/2019 Sujatha Kameswaran 0

நம் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நாளும் ஏன் ஒவ்வொரு நிமிடமும் ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்கிறோம், கற்பிக்கிறோம். கற்றல் என்பது நம்மைச் சுற்றி ஏதேனும் ஒரு காரணி மூலம் நிகழும் நிகழ்வுகளை மனதில்-நம் சிந்தையில் ஏற்றுக்கொள்ளல் ஆகும். பார்த்தல், கேட்டல், படித்தல் மற்றும் எழுதுதல் என்பதன் வாயிலாக விஷயங்களை எண்ணத்தில் சீர்தூக்கிப்பார்த்து நிறுத்திக்கொள்வதே சிறந்த கற்றலாகும். காதில் ஏற்பதெல்லாம் கற்றல் ஆகாது. கற்பதற்கு பார்வை, செவித்திறன், பேச்சுத்திறன் மற்றும் எழுதும் திறன் […]

தனித்துவம்

13/07/2019 Sujatha Kameswaran 0

உலகில் உள்ள அனைவருக்கும் தனித்தன்மை உண்டு. அதுவே அவர்களின் தனித்துவம்.  இரட்டையர்களானாலும் அவர்கள் இருவருக்கும் தனித்தனியே சில திறமைகள், செயல்பாடுகள் இருக்கும். தனித்துவமும் ஒரு தத்துவமே. நமது தனித்துவத்தை – தனித்திறமையை நாமே உணரமுடியும். நமது தனித்திறமையை எவ்வாறு அறிவது? மிகவும் எளிய வழியில் நம்மாலேயே உணரமுடியும். அதாவது, நமக்கு இயல்பாகவும், எளிதாகவும் எவ்வெவற்றையெல்லாம்  செய்ய முடிகிறதோ அவ்வவற்றின் மூலமாக நமது தனித்திறனை நமது செயல்திறன்கள் மூலம் அறியலாம். ஒவ்வொரு வெற்றியாளரும் […]

எண்ணங்கள் வண்ணங்கள்

03/05/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் திட்டப்பட்டியல்: இலக்கை அடைய,  நிச்சயமான விருப்பத்தை நிர்ணயித்துக்கொள்ளவேண்டும். நம்மேல் முழு நம்பிக்கை வைக்கவேண்டும்.  நம் குறிக்கோளினால் ஏற்படும் நன்மைகளையும் தீமைகளையும் பட்டியலிட்டுக்கொள்ளவேண்டும். தடைகளை அறிந்துக்கொண்டு அவற்றை நீக்க அல்லது கடந்து வர வழிமுறைகளை வகுக்கவேண்டும்.  இலக்கை சார்ந்த தற்போதைய நிலவரத்தையும், எதிர்கால வளர்ச்சிக்குத் தேவைப்படும் வளர்ச்சி குறித்தும் கணித்தல் மிக அவசியம். தேவையான மற்ற காரணிகளை, உதவிகளை மற்றும் ஒத்துழைப்பை பட்டியலிடல். இலக்கை நோக்கிய செயல்முறை திட்டமிடல் சாலச்சிறந்தது. குறிக்கோளை அடைய காலவரையறை நிர்ணயத்துக்கொள்ளவேண்டும். மனக்கண்ணோட்டத்தில் […]

1 2 3 4