நட்பு

02/04/2020 Sujatha Kameswaran 0

நல்ல நட்பு நல்ல வாழ்வைத்தரும் உறவுமுறைகளில் நட்பு என்பது சிறந்தது. அதிலும் நல்ல ஆழ்ந்த நட்பு மிகவும் சிறப்பானது. நட்பைப்பற்றி பல புலவர்களும் அறிஞர்களும் தமது சிறந்தக் கருத்துக்களைக் கூறியுள்ளனர். புராணம், இலக்கியம் உரைக்கும் நட்பு: கம்ப ராமாயணத்தில் குகபடலத்தில், ராமன் தன்னைக்காண வந்த குகனைப்பார்த்து, ‘யாதினும் இனிய நண்ப! எல்லாப் பொருள்களினும் இனிமையான நண்பனே; என்பார். நட்பிற்கு பெருமை சேர்க்கும் நண்பனுக்குக் கொடுக்கும் மரியாதையை கம்பர் தமது ராமாயணத்தில் […]

கலி காலம்

01/03/2020 Sujatha Kameswaran 0

புராணங்களின் மூலமாக கலியுகம் அதாவது கலிகாலம் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றியத் தகவல்களை தெரிந்துகொள்வோம். கலியுகத்தில் நிகழக்கூடியதை காகபுஜண்டர் கருடனுக்குக் கூறியதாக சில விவரங்கள் ராமாயணத்தில் உத்திரகாண்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. அவை, கலியுகத்தில் மக்களுக்கு மனம்போனபடி நடப்பதே மார்க்கம் என்றாகிவிடும். தங்கள் லாபத்துக்காக மக்களுக்கு பலவிதமான நெறிமுறைகளை எடுத்துச்சொல்லும் புனித நூல்கள் மறைக்கப்படும். தர்மசெயல்கள் எல்லாம் பேராசையாலும், தீய தூண்டுதல்களாலும் மாற்றப்படும். தற்பெருமை, சுய விளம்பரம் தேடுபவர்கள் அறிஞர்கள் என்று போற்றப்படுவர். […]

உடற்பயிற்சி & உள்ளப்பயிற்சி – 2

25/07/2019 Sujatha Kameswaran 0

நமது முன்னோர்கள், நேர மேலாண்மை மற்றும் உடல் மற்றும் உள்ளம் சார்ந்த விஷயங்களை கையாள்வதில் பெரும் வல்லுனர்கள். அப்பொழுதெல்லாம் ஒவ்வொரு பிரிவினருக்கான செயல்களும் மிகச்சிறந்த முறையிலேயே நடந்துவந்தன. விவசாயிகள் காலத்தை கருத்தில் கொண்டு விவசாயப்பயிர்களை, காலம் மற்றும் தட்பவெப்பத்திற்கு ஏற்றார்போல் விளைவித்தனர். மேலும் அவர்களுக்கான உடற்பயிற்சி விவசாயத்தொழிலை செய்வதன் மூலமே நடந்து முடிந்தது. ஏர் பிடித்து உழுதல், நிலத்திற்கு நீர் பாய்ச்சுதல் என இயற்கையோடு ஒன்றிய பல வேலைகளின் மூலம் […]

ஜனநாயகம்

18/04/2019 Sujatha Kameswaran 0

அனைவருக்கும் உண்டு ஜனநாயகக் கடமை. தனிமனித ஒழுக்கத்தை அடித்தளமாகக்கொண்டது இது. மனித உணர்வுகளை மதிக்கத்தெரிந்ததை வெளிப்படுத்த கிடைக்கும் வாய்ப்பு. மேலும் தான் யார் என்பதை உணர்ந்து, பிறருக்கும் உணர்த்த ஏதுவாய் அமையும் தருணம். தெளிவான எண்ணத்துடன், பல்வேறு விஷயங்களை அலசி ஆராய்ந்து திடமான முடிவினை எடுக்கும் திறன் இவைகளை அறிய உதவும் தருணம் ஜனநாயகக் கடமையை ஆற்றும்போது ஏற்படும். வாழ்க ஜனநாயகம் ! வாழ்க ஜனங்களின் கடமை உணர்வு !

மொழிகளின் மகத்துவம்

06/03/2019 Sujatha Kameswaran 0

மொழி என்பது ஒருவரை மற்றவரோடு இணைப்பது. கருத்துக்களை எண்ணங்களை எளிதாக மற்றவர்களுக்கு தெரிவிக்க ஏற்பட்டது. இந்த மொழியானது முதலில் சைகையில் ஆரம்பித்து பின் பேச்சு வாயிலாகவும், எழுத்து வாயிலாகவும் மேம்பட்டது. இன்றளவும் இம்மூன்று முறைகளும் வழக்கில் உள்ளன. ஆனால் சில மொழிகள்தான் வழக்கில் பெரும்பாலும் இல்லாமல் போய்விட்டது. உலகில் பல மொழிகள் வழக்கத்தில் உள்ளன. அவை அனைத்தும் அனைவருக்கும் தெரிந்திருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவரவர் தத்தம் தேவைகளுக்கேற்ப மொழிகளைக் […]

உரைகல்

23/10/2017 Sujatha Kameswaran 0

‘கல்’ இந்த வார்த்தையை உச்சரித்தால் சாதாரணமாகத்தான் தோன்றும். ஆனால் அதன் பல விதங்கள் மற்றும் அதன் பயன்பாட்டினை மனதில் நிறுத்தி உச்சரித்தோம் என்றால்….. உலகில் உள்ள அனைத்திற்கும் ஏதேனும் ஒரு பயன்பாடு உண்டு. பயனற்றது என எதை எடுத்து வைத்தாலும், அது ஒரு காலத்தில் பயனுள்ளதாகவே இருந்துள்ளதை அறியலாம். மேலும், தற்சமயம் பயனற்றது எனக் கருதப்படுவது, பயனற்றது என்பதற்கு உதாரணமாகப் பயன்படுகிறது. ஆகவே எல்லாவற்றிலும் ஒரு பயன் உண்டு. இப்பொழுது […]

முகமூடி மனிதர்கள்

12/09/2017 Sujatha Kameswaran 0

  அனைவருக்கும் முகம் உள்ளது. அதை எல்லோராலும் பார்க்க முடியும். ஆனால் அவர்களுக்குள் ஒளிந்துள்ள இதர முகங்களை யார் அறிவர்?  காலம் உணர்த்தும். நமது உள் முகங்கள் வெளிப்படும்போது, அவற்றைப் பல நேரங்களில் சரியானது என்றும், அவை அந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்றது என்றும் நாம் நியாயப்படுத்திக்கொள்கிறோம். ஆனால், மற்றவர்களின் இந்நிலைப்பாட்டை பெரும்பாலும் நாம் ஏற்றுக்கொள்வதேயில்லை. சில மாற்று முகங்கள் தவிர்க்கமுடியாதது. பச்சிளம் குழந்தைகளிடம் நாம் காட்டும் முகம். குழந்தைகளின் குறும்பு […]

பெற்றோரும், ஆசிரியரும்

06/09/2017 Sujatha Kameswaran 0

நம்மைச் சுற்றியுள்ள இச்சமுதாயத்தில் பல மாறுதல்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் ஓரிருவரைத் தீயோர் என சுட்டிக்காட்டிட முடிந்தது. அவர்களும் சில காரணங்களாலேயே தீயோராய் நடந்துகொண்டனர். இவற்றை இதிகாசம், புராணம் வழியாகவும், நம் மூதாதையரின் அனுபவங்களாலும் அறியலாம். ஆனால் தற்சமயம், நம்மில் மிகச்சிலரையே, சில கால அளவு வரைமட்டுமே நல்லவர் என அடையாளம் காட்டமுடிகிறது. சில காலங்களுக்குள்ளாகவே அவர்தம் ரூபத்தை மாற்றிக்கொள்கிறார். அதற்கு ஒப்புசப்பற்ற காரணங்கள் வேறு… தவறு செய்வது மனித இயல்பே […]

உடற்பயிற்சி / உள்ளப்பயிற்சி

28/08/2017 Sujatha Kameswaran 2

  முற்கால மனிதர்கள், தங்கள் வாழ்க்கையை சிறப்பாக முறைபடுத்திக் கொண்டனர். காலையில் எழுவது முதல், இரவு உறங்கும் வரையில் அவர்கள் கடைபிடித்த அனைத்து விஷயங்களுமே பெரும்பாலும் அவர்தம் உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம்பயப்பதாகவே அமைந்தது. அதிகாலையில் எழுதல் (இன்று, அதிகாலை நேர வேலை என்றால் ஒழிய பெரும்பாலோர் எழுவதில்லை). பல்தேய்க்க வேப்பங்குச்சி அல்லது ஆலங்குச்சியை உபயோகித்தல். பல்வலி எனில் லவங்கம், உப்பு என இயற்கை முறை வைத்தியத்தையே மேற்கொள்ளல். (இன்று அவை […]

இந்தியாவின் நிலை?!

27/04/2017 Sujatha Kameswaran 0

விளைப்பொருட்களின் பயன்பாடுதான் இப்படி என்றால், மனித வளம் பெரும்பாலும் இழிவு மற்றும் கொச்சைப்படுத்தப்படுகிறது. கூலித்தொழிலாளி முதல் குபேரன் வரை தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டும் மற்றவர்களை ஏமாற்றிக்கொண்டும் வாழ்கின்றனர். இதனாலேயே தனிமனித உழைப்பும், மரியாதையும் இல்லாமல் முகத்தின் முன்னால் ஒன்றும், முதுகின் பின்னால் மற்றொன்றும் நிகழ்கின்றன. சிறு பொருட்கள் முதல் மிகப்பெரிய பொருட்கள் வரை தரம் குறைவாகவும் சிறு தொழில் முதல் பெரிய தொழில்கள் வரை அனைத்திலும் பெரும்பாலும் தரம் குறைவு. பணம் […]

1 2 3