கொன்றை வேந்தன்
கொன்றை வேந்தன் 40. தீராக் கோபம் போராய் முடியும். நீங்காத பெருங்கோபம், இறுதியில் பெரும் போர் ஏற்படச்செய்யும். 41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு. கணவனின் துன்பம் கண்டு துடிக்காத பெண், அடிவயிற்றில் கட்டிய நெருப்பைப் போன்றவளாவாள்.
கொன்றை வேந்தன் 40. தீராக் கோபம் போராய் முடியும். நீங்காத பெருங்கோபம், இறுதியில் பெரும் போர் ஏற்படச்செய்யும். 41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு. கணவனின் துன்பம் கண்டு துடிக்காத பெண், அடிவயிற்றில் கட்டிய நெருப்பைப் போன்றவளாவாள்.
கொன்றை வேந்தன் 38. தாயிற்சிறந்ததொரு கோயிலும் இல்லை. பெற்ற தாயைவிட சிறந்த வணங்கத்தக்க கோயில் இல்லை. 39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு. கடல் தாண்டி வெளிநாடு சென்றாவது, பொருள் ஈட்டவேண்டும்.
திருக்குறள் குறள் – 40. செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி (1-4-10) ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே ஆகும். செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே. Seyarpaala thorum arane oruvarku uyarpaala thorum pazhi That is virtue which each ought to do, and that is vice which each should shun
கொன்றை வேந்தன் 36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர். சோம்பல் குணம் கொண்டவர், வறுமையடைந்து துன்புறுவர். 37. தந்தைசொல் மிக்க மந்திரமில்லை. தந்தை கூறும் அறிவுரையைவிட, மேலான நல்லது ஒன்றுமில்லை.
திருக்குறள் குறள் – 39. அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம் புறத்த புகழும் இல (1-4-9) அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை. Araththaan varuvadhe inpam mar rellaam puraththa pukazhum ila Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it […]
கொன்றை வேந்தன் 34. சையொத்திருந்தால் ஐயம் இட்டுண். மற்றவர்க்கு உதவும் அளவில் பொருள் இருந்தால், இல்லாதவர்க்கு இயன்றவரை, தான தர்மம் செய்துவிட்டு, உண்ணவேண்டும். 35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர். நல்ல மனம் உடையவர், இறுதியில் நற்கதியே அடைவர்.
கொன்றை வேந்தன் 32. செய்தவம் முதிர்ந்தால் கைதவம் மாளும். தவவாழ்க்கை முதிர்ச்சியடைந்தால், துன்பங்கள் விலகிவிடும். 33. சேமம் புகினும் யாமத்து உறங்கு. காவல் பணி புரிபவராயினும், நடு இரவில் சிறிது நேரமாவது உறங்க வேண்டும்.
திருக்குறள் குறள் – 38. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்(1-4-8) ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும். Veezhnaal padaa-amai nandraatrin aqdhoruvan vaazhnaal vazhiyataikkum kal If one allows no day to pass without some good being done, his conduct […]
கொன்றை வேந்தன் 30. சுற்றத்திற்கழகு சூழவிருத்தல். இன்பத்திலும் துன்பத்திலும், விலகாது உடனிருத்தலே உறவினர்களுக்கு சிறப்பாகும். 31. சூதும் வாதும் வேதனை செய்யும். சூதாட்டம் ஆடுவதும், வீணாக விவாதம் செய்வதும் துன்பத்தையேத் தரும்.
திருக்குறள் குறள் – 37. அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தான் இடை(1-4-7) பல்லக்கை சுமப்பவர் மற்றும், அதன்மேலமர்ந்துசெல்லுபவரிடம் அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டாம். Araththaa rithuvena venda sivikai poruththaano tuoorndhaan idai The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a palanquin and the […]
Copyright © 2025 | WordPress Theme by MH Themes