திருவே எம் இல்லம் வருவாயே
திருமாலின் தேவி
திருவே எம் இல்லம் வருவாயே…
பங்கஜ லோசனி பரம கல்யாணி (2)
பார்வதியே எமை காத்தருள்வாயே (2)
எங்கும் நிறைந்த உன் இனிய பொற்பாதம்
எங்கள் இல்லங்களில் தங்கிட வேண்டும்
(திருவே எம் இல்லம் வருவாயே…)
பிள்ளைகள் எத்தனை பிழையது செய்யினும்
தள்ளியே வைப்பது தாய் தனக்கழகோ
உள்ளம் உவந்து ஒருபிடி செல்வம்
அள்ளி கொடுத்தருள் வெள்ளிக்கிழமையில்
(திருவே எம் இல்லம் வருவாயே…)
Leave a Reply